பதிவு செய்த நாள்
28 நவ2017
00:06
புதுடில்லி : ஜவுளி, தோல் மற்றும் காலணிகள் துறைகளை தொடர்ந்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கும் ஊக்கச்சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் பரிசீலிக்கிறது.
ஜவுளித் துறையை மேம்படுத்த, 6,000 கோடி ரூபாய் ஊக்கச்சலுகை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அது போல, தோல் மற்றும் காலணிகள் துறைக்கும், 2,300 கோடி ரூபாய் ஊக்கச்சலுகை திட்டம், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு கூறியதாவது: நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் மேம்பாட்டிற்கு, ஊக்கச்சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2018 பிப்ரவரியில், மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளதால், இத்திட்டம் குறித்து, அடுத்த சில வாரங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதற்கு முன், துறை மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை வழங்கும்படி, ஜி.ஜே.இ.பி.சி., எனப்படும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ஜே.இ.பி.சி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தங்கம் இறக்குமதி வரி, 10 சதவீதமாக உள்ளது. இதை, 4 சதவீதமாக குறைக்க, நிதி அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டு வசதியை பெறவும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் பூங்காக்கள் அமைக்கவும், இத்துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களை சீரமைக்கவும், அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும். தங்கத்தை இறக்குமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்வதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|