ஊடகம் – பொழுதுபோக்கு துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும்ஊடகம் – பொழுதுபோக்கு துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் ... பங்கு சந்தையில் களமிறங்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கு சந்தையில் களமிறங்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ...
ஆயுஷ்’ துறையில் 2.60 கோடி வேலைவாய்ப்பு: சுரேஷ் பிரபு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2017
00:30

புதுடில்லி:‘‘இந்­தி­யா­வில், ‘ஆயுஷ்’ துறை­யில், 2020ல், 2.60 கோடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்து உள்­ளார்.ஆயுர்­வே­தம், யோகா, யுனானி, சித்தா, ஓமி­யோ­பதி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய, ‘ஆயுஷ்’ துறை­யின் வளர்ச்சி குறித்து, அவர் மேலும் பேசி­ய­தா­வது:உள்­நாட்­டில், ஆயுஷ் துறை­யின் சந்தை மதிப்பு, 500 கோடி ரூபாய்; ஏற்­று­மதி, 200 கோடி ரூபாய் என்ற அள­வில் உள்­ளது.இத்­த­கைய பாரம்­ப­ரிய ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யில், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் துவங்க விரும்­பும் இளை­ஞர்­க­ளுக்கு, எண்­ணற்ற வர்த்­தக வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன.மக்­க­ளுக்கு, பாரம்­ப­ரிய மருத்­துவ வச­தி­கள் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ஆயுஷ் துறை­யில், அனைத்து நாடு­க­ளு­டன் இணைந்து செய­லாற்ற, இந்­தியா ஆர்­வ­மாக உள்­ளது.இதற்­காக, ஆயுஷ் துறை­யில், 100 சத­வீ­தம் அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி அளிக்­கப்­பட்டு உள்­ளது.இந்­தி­யா­வில், மருத்­துவ குண­முள்ள, 6,600க்கும் அதி­க­மான மூலிகை செடி­கள் உள்ளன. மூலிகை மருத்­துவ பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், இந்­தியா, இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.நாட்­டின் ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­யில், ஆயுஷ் மருத்­து­வத்­திற்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை ஒன்­றி­ணைத்து, மருத்­துவ துறையை முன்­னேற்­றும் வாய்ப்பு, தற்­போது கிட்­டி­உள்­ளது.இத­னால், ஆயுஷ் துறை­யில், அடுத்த மூன்று ஆண்­டு­களில், 2.60 கோடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்.நேர­டி­யாக, 10 லட்­சம் பேரும், மறை­மு­க­மாக, 2.50 கோடி பேரும் வேலை­வாய்ப்பு பெறு­வர்.வரும், 2022ல், ஆயுஷ் துறை­யின் சந்தை மதிப்பு, மூன்று மடங்கு அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)