பதிவு செய்த நாள்
14 டிச2017
00:06
மும்பை:‘பங்கு வெளியீட்டில் இறங்கும் திட்டமில்லை’ என, ‘ஆர்ஜியோ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.முகேஷ் அம்பானியின், ஆர்ஜியோ, விரைவில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளதாக, நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இதை மறுத்து, ஆர்ஜியோ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:ஒரு
சில ஊடகங்களில், பங்கு வெளியீடு தொடர்பான செய்திகள்
வெளிவந்துள்ளன. அவை ஊகச் செய்திகளாகும். ஊடகங்களில் வெளியாகும்
ஊகச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு பதில் அளிப்பது,
நிறுவனத்தின் கொள்கை அல்ல.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்ஜியோ,
2016, செப்., 5ல் வர்த்தக ரீதியிலான தொலை தொடர்பு சேவையை துவக்கி, 170
நாட்களில், 10 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை ஈர்த்தது. கடந்த
செப்டம்பர் நிலவரப்படி, இதன் சந்தாதாரர் எண்ணிக்கை, 14.59
கோடியாக உள்ளது. இந்நிறுவனம், ஒரு மாதத்தில், ஒரு சந்தாதாரர்
வாயிலான சராசரி வருவாயாக, 156.40 ரூபாய் ஈட்டி வருகிறது. ஜூலை –
செப்டம்பர் வரை, இந்நிறுவனம், 270.59 கோடி ரூபாய் இழப்பை
சந்தித்துள்ளது. வரும் காலாண்டுகளில், இந்நிறுவனம் லாபம் காணும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|