பதிவு செய்த நாள்
17 டிச2017
23:55
இந்திய வேலைவாய்ப்பு துறையில், பெரிய அளவில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 9 சதவீத பணியாளர்கள், இப்போது இல்லாத புதிய வேலைவாய்ப்புகளில், பணிக்கு அமர்த்தப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
‘பிக்கி- நாஸ்காம்’ மற்றும், ‘இ அண்ட் ஒய்’ இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில், வேலைவாய்ப்பில் மந்தமான சூழல் நிலவும் என்றும், 2022ல், தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமயமாதல், புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் தாக்கத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 9 சதவீத பணியாளர்கள், இப்போது நடைமுறையில் இல்லாத புதிய வேலைகளில், பணி அமர்த்தப்படலாம் என்றும், இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தொழில்நுட்ப தாக்கம், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தியா இத்தகைய பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளதாகவும், அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|