பதிவு செய்த நாள்
22 டிச2017
02:47
புதுடில்லி : இந்தியாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ எனப்படும், மேகக் கணினி தொழில்நுட்ப வசதிகளை வழங்க உள்ளதாக, சீனாவின், அலிபாபா கிளவுட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மும்பையில், புதிய தரவு மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மேகக் கணினி தொழில்நுட்பத்தில், பல்வேறு தரவு சேவைகள் வழங்கப்படும். மிகப்பெரிய அளவிலான கணினி பயன்பாடு, தரவு பாதுகாப்பு தளம் உள்ளிட்ட வசதிகளை, நிறுவனங்கள் பெறலாம்.
அலிபாபா கிளவுட் நிறுவனத்திற்கு, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட, 16 பொருளாதார மண்டலங்களைச் சேர்ந்த, 33 மண்டலங்களில் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, சேவை திட்டம், அமலாக்கம், விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவற்றை வழங்க, தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|