பதிவு செய்த நாள்
22 டிச2017
02:49
புதுடில்லி : ‘மத்திய அரசின் சலுகைகளை பெற, 5,350 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையால், அங்கீகரிக்கப்பட்டு உள்ளன’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தில், பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை பெற, 5,350 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தகுதி உடையவை என, தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூலம், 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
நிதி பெறும் திட்டத்தில், 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 337.02 கோடி ரூபாய் பெற்றுள்ளன. மேலும், வருமான வரி சட்டத்தில் இருந்து, 74 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியம், 2015 – 16 நிதியாண்டில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கிக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. 2016 – 17ல், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|