பதிவு செய்த நாள்
02 ஜன2018
00:53
ஜாம்ஷெட்பூர்:இந்தியாவில், உருக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளதாக, டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டி.வி.நரேந்திரன், பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விபரம்:கடந்த ஆண்டு, சர்வதேச அளவில் உருக்கின் தேவை அதிகரித்தது. இதனால், இந்திய உருக்கு துறை, எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு, உலகின் மூன்றாவது மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது.மத்திய அசின் தேசிய உருக்கு கொள்கை, உருக்கு துறையின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக உள்ளது.நிறுவனம், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
ஒடிசாவில், கலிங்கநகர் உருக்கு பிரிவின் உற்பத்தித் திறன், 30 லட்சம் டன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இத்துடன், 23,500 கோடி ரூபாய் முதலீட்டில், உற்பத்தித் திறனை, 80 லட்சம் டன்னாக அதிகரிக்க, நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது, வாகனம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் உருக்கு தேவையை, சமாளிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|