பதிவு செய்த நாள்
10 ஜன2018
04:18
சென்னை;''வாராக்கடன் வசூலிப்பு வேகம் முன்பை விட அதிகரித்து உள்ளதால், லாப பாதையை நோக்கி செல்கிறோம். அதனால், வாடிக்கையாளர்கள் அஞ்ச தேவையில்லை,'' என, ஐ.ஓ.பி., எனப்படும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாண் இயக்குனர், ஆர்.சுப்ரமணியகுமார் தெரிவித்தார்.வாராக்கடன் சுமையில் இருந்து மீண்டு வரும், ஐ.ஓ.பி., அதை குறைப்பதற்கு, புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கிடையே, வங்கி முடங்கும் நிலையில் உள்ளதாக வதந்தி பரவியது.
இது தொடர்பாக, சென்னையில், சுப்ரமணியகுமார் கூறியதாவது:ஒவ்வொரு வங்கியிலும், வாராக்கடன் தொகை இருக்கும். அதை சமாளிக்க, வங்கியின், 'ஆப்பரேட்டிங் பிராபிட்' என்ற செயல்பாட்டு லாபத்தில் இருந்து, ஒரு பெரும் தொகையை எடுத்து, ஒதுக்கி வைக்க வேண்டும்.
அப்படி, 'புரவிஷனுக்கு' லாபத்தில் இருந்து, அதிக தொகை சென்று முடங்கியதால், வங்கியின் லாபம் குறைந்தது. தற்போது, வாராக்கடன் வசூலிப்பு வேகம் அதிகரித்துள்ளது.இந்தாண்டில், 13 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து, அதில், 6,749.57 கோடி ரூபாய் வசூலித்து விட்டோம். இது, வங்கி ஏற்றம் கண்டு வருவதை காட்டுகிறது.இதை, இன்னும் வேகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால், புரவிஷன் குறைந்து, செயல்பாட்டு லாபம் விரைவில் அதிகரிக்கும்.
இதற்கிடையே, தற்போது வங்கியின், 'ஷேர் பிரீமியம்' என்ற, பங்குதாரர்களின் கணக்கில் உள்ள தொகையை எடுத்து, வாராக்கடனை கழிக்கும் புது முயற்சியை, முதன்முறையாக துவங்கி உள்ளோம். இது, விதிகளுக்கு உட்பட்டதே. இது, அவர்களின் சேமிப்பு, முதலீட்டை பாதிக்காது.
அதே நேரம், வங்கியின் லாப, நஷ்டத்தில் மாற்றம் ஏற்படாமல், வாராக்கடன் அளவு குறையும். வாராக்கடன் குறைய குறைய, புரவிஷனில் முடங்கி உள்ள பெரும் தொகை, அப்படியே லாபக் கணக்கிற்கு போகும். இது, இரட்டை லாபம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|