ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம்ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம் ... சம்­பள உயர்வு எவ்­வ­ளவு? சம்­பள உயர்வு எவ்­வ­ளவு? ...
புது­மண தம்­ப­தியர் மனதில் கொள்ள வேண்­டிய நிதி விஷ­யங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
01:49




*புதிய வாழ்க்­கையை துவக்கும் புது­மண தம்­ப­தியர் தங்கள் எதிர்­காலம் தொடர்­பான பல விஷ­யங்­களை திட்­ட­மி­டு­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். இதற்­காக பல­வற்றை மனம் விட்டு பேசவும் செய்­கின்­றனர். இதில் நிதி விஷ­யங்­க­ளையும் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். மண­மக்கள் தங்­க­ளுக்­கான நிதி கொள்­கையை வகுத்­துக்­கொள்­வது, எதிர்­கால வளத்­திற்கு வழி­வ­குக்கும்.
*மண­மக்கள் இரு­வரும் வேறு­ வேறு பொரு­ளா­தார பின்­னணி கொண்­டி­ருக்­கலாம். பொரு­ளா­தார பின்­னணி ஒன்­றாக இருந்தால் கூட செலவு பழக்­கங்கள் மாறு­பட்­டி­ருக்­கலாம். எனவே, தங்கள் வரு­மானம் மற்றும் வாழ்க்கை முறை எதிர்­பார்ப்­புகள் குறித்து மனம்­விட்டு பேசி, அதற்­கேற்ற பட்­ஜெட்டை வகுத்­துக்­கொள்ள வேண்டும். பொது­வான சேமிப்பு கணக்கு வைத்­துக்­கொள்­வதன் மூலம் குடும்ப செல­வு­களை திறம்­பட நிர்­வ­கிக்­கலாம்.

*எதிர்­கா­லத்தில் வீடு, வாகனம் போன்­ற­வற்றை வாங்­கு­வது பற்றி பேசு­வது போல், ஏற்­க­னவே கடன் பொறுப்­புகள் இருந்தால் அதை பரஸ்­பரம் பகிர்ந்து கொள்ளவேண்டும். கல்­விக்­கடன் போன்ற விப­ரங்­களை தெரி­விக்க வேண்டும். பெற்­றோருடன் இணைந்து சொத்­துகள் வாங்­கி­யி­ருந்­தாலும் அதை தெரி­விக்க வேண்டும். மாதாந்­திர கடன் தவ­ணையை திட்­ட­மி­டு­வதில் இது உதவும்.பின்னர் பிரச்னை வரு­வ­தையும் தவிர்க்­கலாம்.
*திரு­மண உற்­சா­கத்­திற்கு மத்­தியில் தங்­க­ளுக்­கான நிதி இலக்­கு­களை அமைத்­துக்­கொள்­ளவும் மறக்க கூடாது. நிதி இலக்­கு­க­ளுக்­கான காலம், அவற்­றுக்­கான சேமிப்பு மற்றும் முத­லீட்டு திட்­டங்கள் குறித்தும் பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கு என்ன அவ­சரம் என நினைக்­காமல், முத­லி­லேயே நிதி இலக்­கு­களை தீர்­மா­னித்து செயல்­ப­டு­வது, செலவு பழக்­கங்­களை கட்­டுப்­ப­டுத்­தவும் கைகொ­டுக்கும்.
*தம்­ப­தி­யரில் இரு­வ­ருக்­குமே நிதி பொறுப்­புகள் இருக்­கலாம். தங்­களை சார்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு பொரு­ளா­தார நோக்கில் உதவி செய்ய வேண்­டிய சூழல் இருக்­கலாம். இது குறித்து வெளிப்­ப­டை­யாக துணை­யிடம் பேசி விடு­வது நல்­லது. குடும்­பத்­தி­ன­ருக்கு உத­வு­வது தனிப்­பட்ட விருப்பம் சார்ந்­தது என்­றாலும், தம்­ப­தியர் இது குறித்து மனம் திறந்து பேசிக்­கொள்­வது நல்­லது.
*திரு­ம­ண­மான பிறகு கணவன், -மனை­வியில் ஒருவர் நிதி விஷ­யங்­களை கவ­னித்­துக்­கொள்­வது வழக்கம். முத­லீடு விஷ­யங்­களை பெரும்­பாலும் கணவர் கவ­னித்­துக்கொள்­ளலாம். ஆனால், கணவன், மனைவி இரு­வ­ருமே நிதி விஷ­யங்­களை அறிந்­தி­ருப்­பது நல்­லது. நிதி முடி­வு­களை இரு­வரும் விவா­தித்து கூட்­டாக மேற்­கொள்­வது சிறந்­தது. சேமிப்பு, முத­லீடு, கடன்கள், காப்­பீடு பற்றி இரு­வரும் அறிந்­தி­ருக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)