பதிவு செய்த நாள்
25 ஜன2018
02:48
டாவோஸ் : ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பத் துறையில், உலகளவில், 10 லட்சம் ஊழியர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஐ.டி., துறையில், செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர், சாதனங்கள் இடையிலான இணைய வசதி, இயந்திர கல்வி, மேகக் கணினி உள்ளிட்ட, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு பெருகுகிறது. நான்காவது தொழில் புரட்சி என வர்ணிக்கப்படும், இத்தகைய தொழில்நுட்பங்களில் பணியாற்ற, போதிய நிபுணத்துவம் வாய்ந்த வல்லுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.நான்கில் ஒருவருக்கு, புதிய தொழில்நுட்பங்களில் பரிட்சயம் இல்லாத நிலை காரணமாக, ஐ.டி., துறையில், வேலையிழப்பு அதிகரிக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.அதனால் தற்போதைய, ஐ.டி., வல்லுனர்களுக்கு, புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து, பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதற்கான வலைதளத்தை, சுவிட்சர்லாந்தின், டாவோஸ் நகரில் நடைபெறும், சர்வதேச பொருளாதார மாநாட்டில், அதன் நிறுவனர், கிளாஸ் ஷவப் அறிமுகப்படுத்தினார்.ஏப்ரல் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ள இந்த வலைதளத்தில், புதிய தொழில்நுட்பக் கல்வி, பயன்பாடு உள்ளிட்ட, அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படும். 2021 ஜனவரிக்குள், புதிய தொழில்நுட்பங்களில் பூரண நிபுணத்துவம் பெற்ற, 10 லட்சம், ஐ.டி., வல்லுனர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இத்திட்டத்தில், இன்போசிஸ், டி.சி.எஸ்., உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்துள்ளன.
மின்னணு யுகம்வல்லுனர்கள், புதிய தொழில்நுட்ப ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது போல, ஊழியர்களின் திறனை மேம்படுத்த, நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.ராஜேஷ் கோபிநாதன், தலைவர், டி.சி.எஸ்.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|