பதிவு செய்த நாள்
27 ஜன2018
01:14
கோல்கட்டா : ‘பிட்காயின், எத்திரியம், லைட்காயின்’ போன்ற, வலைதளங்களில் மட்டும் புழங்கும் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அரசு, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பின், ‘டிஜிட்டல்’ கணக்கீட்டு பிரிவு உறுப்பினர், டெபாஷிஸ் மித்ரா கூறியதாவது: நிறுவனங்கள் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளில், மெய்நிகர் கரன்சிகள் குறித்த தகவல்களும் இடம் பெற துவங்கி உள்ளன. அதனால், நிறுவனங்கள் அளிக்கும் மெய்நிகர் கரன்சி விபரங்கள், பரிவர்த்தனைகள் ஆகியவை குறித்தும் அவற்றை எந்த அடிப்படையில் கணக்கீடு செய்வது என்பது பற்றியும், தெளிவாக விளக்குமாறு, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, மெய்நிகர் கரன்சிகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. மார்ச் இறுதிக்குள், மத்திய விவகாரங்கள் அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|