பதிவு செய்த நாள்
24 பிப்2018
00:41
புதுடில்லி : சிங்கப்பூரைச் சேர்ந்த, செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், துணை நிறுவனம், செம்கார்ப் எனர்ஜி இந்தியா. இந்நிறுவனம், இந்தியாவில், அனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது. ‘பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதி, பழைய கடன்களை செலுத்தவும்; நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்’ என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல் கிரெடிட் சுயிஸ் செக்யூரிட்டிஸ் இந்தியா, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை, மேற்கொள்ள உள்ளன. இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, டிசம்பர் நிலவரப்படி, இந்நிறுவனத்தின் மின் உற்பத்தி திறன், 3.57 கி.வாட் ஆக உள்ளது. இத்துடன், 0.5 கி.வாட் மின் உற்பத்திக்கான கட்டுமான பணிகளையும், இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|