பதிவு செய்த நாள்
01 மார்2018
07:45
புதுடில்லி : ஏர்செல் நிறுவனம், கடன் சுமை காரணமாக, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், ‘திவால்’ விண்ணப்பம் அளித்துள்ளது.மலேஷியாவின், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஏர்செல், 19 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இந்நிறுவனத்தை கையகப்படுத்த, அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்வந்தது. ஆனால், சட்ட பிரச்னைகளால் தாமதம் ஏற்பட்டதால், இத்திட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு நிதியுதவி செய்ய முன்வந்த, மேக்சிஸ் நிறுவனமும் பின்வாங்கி விட்டது.இதனால், தொலை தொடர்பு இணைப்பு சேவை நிறுவனங்களுக்கு பணம் தர முடியாமல், ஏர்செல் தத்தளித்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள், கடந்த மாதம், தொலை தொடர்பு இணைப்பு சேவையை துண்டித்தன.இதனால், ஏர்செல் சந்தாதாரர்கள் பாதிப்பிற்கு ஆளாகினர். இதைஅடுத்து ஏற்பட்ட சமரச தீர்வை தொடர்ந்து, ஏர்செல் சேவை மீண்டும் துவங்கி உள்ளது. இந்நிலையில், திவால் சட்டத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஏர்செல் முன்வந்து உள்ளது.
சந்தாதாரர்களுக்கு சலுகைதற்போது, ஒரு நிறுவனத்தின் மொபைல் போன் சேவையை, குறைந்தபட்சம், 90 நாட்கள் பயன்படுத்தியோர் மட்டுமே, வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாற முடியும்.இந்த விதிமுறை, ஏர்செல் சந்தாதாரர்களுக்கு தளர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஒருவர், ஏர்செல் சேவையை பெற்று, 90 நாட்கள் பூர்த்தியாகாத நிலையிலும், அவர், வேறு நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவைக்கு உடனே மாறலாம்.வேறு நிறுவன சேவைக்கு மாறியவர்களுக்கு, திரும்பத் தர வேண்டிய தொகை குறித்த விபரங்களை தருமாறு, ஏர்செல் நிறுவனத்திற்கு, ‘டிராய்’ உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|