பதிவு செய்த நாள்
07 மார்2018
00:16
புதுடில்லி:பெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள், மார்ச்சில், பெயின்ட் விலையை, 1.5 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.இது குறித்து, ‘ப்ளூம்பெர்க் குயின்ட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள
ஆய்வறிக்கை:பெயின்ட் விலை உயர்விற்கான காரணம் குறித்து, நாடு முழுவதும், 35 முகவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதிலிருந்து எடுக்கப்படும், உப பொருட்களின் விலை
அதிகரித்துள்ளது. இந்த உப பொருட்கள், பெயின்ட் தயாரிப்புக்கு அத்தியாவசியமாக உள்ளன.
இதன்
காரணமாக, பெயின்ட் நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம்
உயர்ந்துள்ளது. இதையடுத்து, பெயின்ட் விலையை, நிறுவனங்கள் உயர்த்தி
உள்ளன.
மூலப்பொருட்கள் விலை உயர்வால், பெயின்ட் நிறுவனங்களின்,
லாப வரம்பு, அக்., – டிச., காலாண்டில் குறைந்துள்ளது. எனினும்,
உள்நாட்டில் பெயின்ட் தேவை அதிகரித்து உள்ளதால், பெரும்பாலான
நிறுவனங்களுக்கு, வரிக்கு பிந்தைய லாபம், நன்கு இருக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|