டிரம்ப் வர்த்தக போர் இந்திய வைர வர்த்தகம் பெரிதும் பாதிக்கும்டிரம்ப் வர்த்தக போர் இந்திய வைர வர்த்தகம் பெரிதும் பாதிக்கும் ... முதலீட்டு சேவையில் ‘பேடிஎம் மணி’ முதலீட்டு சேவையில் ‘பேடிஎம் மணி’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிரச்னைகளை வங்கிகள் விரைந்து தீர்க்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2018
00:21

ஐதராபாத்:‘‘வங்­கி­கள், தற்­போது சந்­தித்து வரும் பிரச்­னை­க­ளுக்கு விரைந்து தீர்வு கண்டு, மீண்­டும் அதிக கடன் வழங்­கும் அள­விற்கு உயர வேண்­டும்,’’ என, ரிசர்வ் வங்கி முன்­னாள் கவர்­னர், சி.ரங்­க­ரா­ஜன் தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது:பல்­வேறு மோச­டி­களும், வாராக்­க­டன்­களும், வங்­கித் துறையை அலைக்­க­ழிக்­கின்றன. ஒட்­டு­மொத்த வங்­கித் துறை, தற்­போது, கடு­மை­யான அழுத்­தத்­தில் உள்­ளது. ஏற்­க­னவே, சில ஆண்­டு­க­ளாக இத்­த­கைய அழுத்­தத்தை, வங்­கித் துறை சந்­தித்து வரு­கிறது.வங்­கித் துறையை சீர­மைக்க, ரிசர்வ் வங்­கி­யும், மத்­திய அர­சும், பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கின்றன.பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­த­னம் வழங்­கும், மத்­திய அர­சின், மறு பங்கு மூலதன திட்­டம் உள்­ளிட்ட பல நட­வ­டிக்­கை­கள், வங்­கித் துறை­யின் செயல்­பா­டு­களை வலி­மை­யாக்­கும். இதன் மூலம், வங்­கி­கள் மீண்­டும், அதி­க­ள­வில் கடன் வழங்­கு­வ­தற்­கான ஆற்­றலை பெறும்.‘டிபா­சிட்’ திரட்­டு­வ­தும், கடன் வழங்­கு­வ­தும் தான், வங்­கி­களின் முக்­கிய பணி­யா­கும். இந்­நி­லை­யில், மோசடி, வாராக்­க­டன் பிரச்­னை­களில், வங்­கித் துறை சிக்கி உள்­ளது. நாட்­டின் நலன் கரு­தி­யும், வளர்ச்­சியை கரு­தி­யும், வங்­கி­கள் தற்­போ­தைய பிரச்­னை­களில் இருந்து, முடிந்­த­வரை விரை­வாக வெளியே வர வேண்­டும். இதை­ய­டுத்து, வங்­கி­கள், மீண்­டும் தாரா­ள­மாக கடன் கொடுக்­கும் நிலைக்கு உயர வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, பஞ்­சாப் நேஷ­னல் வங்கி மோசடி தொடர்­பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்­சிஸ் வங்­கி­களின் நிர்­வாக இயக்­கு­னர்­கள், சந்தா கோச்­சார், ஷிக்கா சர்மா ஆகி­யோர் உட்­பட, 31 வங்­கி­களின் நிர்­வாக இயக்­கு­னர்­க­ளுக்கு, தீவிர மோசடி புல­னாய்வு பிரிவு, ‘நோட்­டீஸ்’ அனுப்பி இருப்­பது, தனி­யார் வங்­கித் துறை­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)