பொருளாதார வளர்ச்சி இரு மடங்கு உயரும்பொருளாதார வளர்ச்சி இரு மடங்கு உயரும் ... பதிவு நீக்கிய நிறுவனங்களின் கேட்பாரற்ற ரூ.37,500 கோடி பதிவு நீக்கிய நிறுவனங்களின் கேட்பாரற்ற ரூ.37,500 கோடி ...
ஊரக துறை சார்ந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2018
04:05

புதுடில்லி : வரும் மாதங்­களில், ஊர­கத் துறை சார்ந்த வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை உயர வாய்ப்­புள்­ள­தாக, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது குறித்து, உல­க­ள­வில், நிதிச் சேவை­களில் ஈடு­பட்­டுள்ள, ‘பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லிஞ்ச்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: உள்­நாடு மற்­றும் சர்­வ­தேச நில­வ­ரங்­க­ளால், இந்­திய பங்­குச் சந்­தை­கள், வரும் மாதங்­களில் அதிக ஏற்ற, இறக்­க­மாக இருக்­கும். மும்பை பங்­குச் சந்­தை­யின், ‘சென்­செக்ஸ்’ குறி­யீடு, தற்­போது உள்­ளதை விட குறைந்து, டிசம்­ப­ரில், 32 ஆயி­ரம் புள்­ளி­க­ளாக சரி­யும்.

இந்த நிலை­யி­லும், ஊரக வளர்ச்சி சார்ந்த, சிமென்ட், இரு­சக்­கர வாக­னம், நுகர்­பொ­ருட்­கள் போன்ற துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் பங்­கு­க­ளுக்கு, தேவை அதி­க­ரிக்­கும்; அத­னால், பங்­கு­கள் விலை உய­ரும். அடுத்த ஆண்டு வர உள்ள, பொதுத் தேர்­தலை கருத்­தில் கொண்டு, மத்­தி­யில் ஆளும், பா.ஜ., அரசு, ஊரக முன்­னேற்­றத்­திற்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக, ஊரக மக்­களின் வாழ்க்கை தரம் மேம்­படும். அவர்­களின் செல­வ­ழிப்பு வரு­வாய் உய­ரும் என்­ப­தால், நுகர்வு அதி­க­ரிக்­கும்.

மத்­திய அரசு, 2022ல், ‘அனை­வ­ருக்­கும் வீடு’ என்ற இலக்கை நோக்கி நடை­போட்டு வரு­கிறது. இதற்கு, ‘பிர­த­மர் வீட்­டு­வ­சதி திட்­டம்,’ வீட்­டு­வ­சதி கடன், வட்டி ஆகி­ய­வற்­றுக்கு வழங்­கும் மானி­யம் ஆகி­யவை உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இத­னால், ஊரக பகு­தி­களில் கட்­டு­மான பொருட்­களின் தேவை அதி­க­ரிக்­கும். இது, சிமென்ட், உருக்கு உட்­பட, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு உத­வும்.

ஊரக மக்­களின் செல­வ­ழிப்பு திறன் உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தால், நுகர்ப்­பொ­ருட்­க­ளுக்­கான தேவை பெரு­கும். இது, இத்­துறை நிறு­வன பங்­கு­கள் விலை உயர்­வுக்கு வழி வகுக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)