பதிவு செய்த நாள்
28 மார்2018
00:46
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பாக, பேச்சு நடத்தி வருகிறது.
வங்கி சாரா நிதி சேவையில் ஈடுபட்டுள்ள, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின், துணை நிறுவனமாக, ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் உள்ளது. இந்நிறுவனம் பொதுமக்களுக்கு, மோட்டார், விபத்து, வீடு மற்றும் பயண காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில், சுந்தரம் பைனான்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில், ஒரு பகுதியை விற்பனை செய்து, வணிகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகளை, முதலீட்டு நிறுவனமான, கோல்டுமேன் சாச்ஸ் வாங்க உள்ளது. இது தொடர்பாக, இரு நிறுவனங்களுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது. இதன்படி, 49 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, ராயல் சுந்தரம் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மதிப்பு, 50 கோடி டாலர். இதற்கு முன், இங்கிலாந்தைச் சேர்ந்த, ராயல் அண்ட் சன் அல்லையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், சுந்தரம் பைனான்ஸ் ஒப்பந்தம் செய்து, பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|