பதிவு செய்த நாள்
30 மார்2018
02:06
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு, கடன் பத்திர விற்பனை தொடர்பான விதிகளை மீறியதற்காக, 58.90 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹெச்.டி.எம்., எனப்படும், முதிர்ச்சிக் காலம் வரை, விற்பனை செய்யக் கூடாத கடன் பத்திர பிரிவில், குறிப்பிட்ட மதிப்பிலான கடன் பத்திரங்களை, விதிகளை மீறி விற்பனை செய்துள்ளது.இது, ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகளை மீறிய செயல் என்பதால், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இவ்வங்கி, அதன் வாடிக்கையாளர்களுடன் கடன் பத்திரங்கள் தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை, இந்த நடவடிக்கை பாதிக்காது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதனிடையே, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் இயக்குனர் குழு கூடி, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது, முழு நம்பிக்கை உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது.
‘வீடியோகான்’ நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில், சந்தா கோச்சார் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை; உள்நோக்கம் கொண்டது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|