பதிவு செய்த நாள்
01 ஏப்2018
05:04
மும்பை: ‘ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாது’ என, யு.பி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, ஏப்., 5ல், வட்டி விகித நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளது. அதில், தற்போதைய, 6 சதவீத, ரெப்போ வட்டியில் மாற்றம் ஏதும் இருக்காது என, தெரிகிறது.இதற்கு, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதும், அதிசயத்தக்க அளவில் பணவீக்கம் குறைவாக உள்ளதும் காரணம் எனலாம்.நடப்பு ஜனவரி – மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்கம், 5.1 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 4.4 சதவீதமாக உள்ளது.வரும், 2018 -– 19ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், 3.6 சதவீதத்தை விட அதிகம். இத்தகைய அம்சங்களால், வரும் நிதியாண்டில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|