வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம்வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம் ... சந்­தே­கத்­துக்கு இடம் கொடா­தீர்! சந்­தே­கத்­துக்கு இடம் கொடா­தீர்! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிதி இலக்­குகள் நிறை­வேற அதிக தொகை முத­லீடு அவ­சியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2018
00:30

எஸ்.ஐ.பி., மூலம், மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்யும் போது, கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் பற்றி ஒரு பார்வை.

முத­லீட்டின் மீது அதிக பலனைப் பெற, மியூச்­சுவல் பண்ட் திட்­டங்கள் ஏற்­ற­தாக அமை­கின்­றன. மியூச்­சுவல் பண்ட் வகை முத­லீடு பற்றி அறிந்து, இதன் பக்கம் ஈர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு, எஸ்.ஐ.பி எனப்­படும், சிஸ்­ட­மேட்டிக் இன்­வெஸ்ட்மென்ட் பிளான் மிகவும் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கி­றது. எஸ்.ஐ.பி., முறையின் மூலம், மாதாந்­திர அல்­லது காலாண்டு என, குறிப்­பிட்ட கால அளவில், மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்­யலாம். சம­பங்கு சார்ந்த, முத­லீட்டின் பலனைப் பெற உதவும் மியூச்­சுவல் பண்ட் முத­லீட்டைத் துவக்க, எஸ்.ஐ.பி., முறை ஏற்­ற­தாக இருக்­கி­றது.

தொடர்ந்து, சீரான முத­லீட்டை மேற்­கொள்­ளலாம் என்­பதால், முத­லீட்டு ஒழுங்கை அளிப்­ப­தோடு, அதிக பலனைப் பெறவும் உத­வு­கிறது. 500 ரூபாய் எனும் குறைந்த தொகையில் கூட, முத­லீட்டை துவக்­கலாம் என்­பதே, இத்­திட்­டத்தின் சாத­க­மான அம்­ச­மாக அமை­கி­றது.

எவ்வளவு தொகை

எஸ்.ஐ.பி., மூல­மான முத­லீடு சிறந்த தேர்வு என்­றாலும், இதில் குறைந்த தொகையை மட்­டுமே முத­லீடு செய்­வதால், அதிக பலன் இல்லை என, நிதி ஆலோ­ச­கர்கள் கூறு­கின்­றனர்.
உதா­ர­ண­மாக, ஒருவர், 15 ஆண்­டு­க­ளுக்கு முன், மாதந்­தோறும் 10 ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ.பி., மூலம் முத­லீடு செய்­தி­ருந்தால், இப்­போது 57 லட்சம் ரூபாய் பெற வாய்ப்பு
இ­ருக்­கி­றது.

வைப்பு நிதி அல்­லது பி.பி.எப்., முத­லீ­டு­க­ளுடன் ஒப்­பிடும் போது, இது கணி­ச­மான பல­னாகும். ஆனால், சம­பங்­குகள் தரும் நீண்ட கால முத­லீட்டு அள­வுகோலின் படி, பார்த்தால், இது பிர­மா­த­மா­னது இல்லை என்­கின்­றனர். இதில் கவ­னிக்க வேண்­டிய அம்சம் என்­ன­வெனில், முத­லீடு செய்யும் கால அளவு மற்றும் முத­லீடு செய்யும் தொகை அளவு இரண்­டுமே முக்­கியம் என்­ப­தாகும்.

எஸ்.ஐ.பி., திட்­டங்­களில் தொடர்ந்து முத­லீடு செய்­வது, அதற்­கேற்ற பலனை அளிக்கும். எனவே இடை­வி­டாமல் முத­லீட்டை தொடர்­வது அவ­சியம். தொடர்ந்து, 15 ஆண்­டு­க­ளுக்கு எஸ்.ஐ.பி., முத­லீட்டை தொடர்­வது இப்­போது அத்­தனை பர­வ­லாக இல்லை என்­றாலும், மியூச்­சுவல் பண்ட் தொடர்­பான விழிப்­பு­ணர்வு, தற்­போது அதி­க­ரிக்கத் துவங்­கி­உள்ள நிலையில், இந்த மாற்­றத்தை எதிர்­பார்க்­கலாம்.

மேலும், முதல் முறை­யாக மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் பங்­கேற்­ப­வர்கள், எஸ்.ஐ.பி.,
மூலம் குறைந்த அள­வி­லான தொகையைச் செலுத்தும் வழக்கம் கொண்­டுள்­ளனர். இதில் தவறு ஏதும் இல்லை தான். அதிலும், குறிப்­பாக, மியூச்­சுவல் பண்ட் முத­லீட்­டிற்கு முதல்
முறை­யாக மாறும் நிலையில், சிறிய தொகையில் துவங்கி அறி­முகம் செய்து கொள்­வதும் நல்­லது தான்.

நிதி இலக்கு

ஆனால், நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ற பலனை பெற வேண்டும் எனில், முத­லீடு செய்யும் தொகையும் அதி­க­மாக இருக்க வேண்டும். எஸ்.ஐ.பி., முதல் மாதம் 1,000 ரூபாய் முத­லீடு செய்தால், பத்­தாண்­டு­ க­ளுக்கு பின், அது அளிக்கும் பலன் கணி­ச­மாக இருக்­கலாம்.
ஆனால் அதன் மூல­மான மொத்த பலன், ஒரு­வரின் நிதி நிலையில், பெரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வாய்ப்­பில்லை. ஆனால் மாதந்­தோறும் அதிக தொகையை முத­லீடு செய்­து இ­ருந்தால், மொத்த பலன் இன்னும் சிறப்­பாக இருந்­தி­ருக்கும்.

சிறிய தொகையில் துவங்­கி­னாலும், அதே தொகையை தொட­ராமல், வரு­மா­னத்­திற்
கு ஏற்ப, அந்த தொகையை தொடர்ந்து உயர்த்­திக்­கொண்டு வரு­வது, நல்ல உத்­தி­யாக அமையும். நீண்ட கால நோக்கில் தொகையும் அதி­க­ரித்து, முத­லீடு தரும் பலனும் அதி­க­மாக இருக்கும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)