வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம்வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‘ஸ்டார்ட் அப்’ நிதியம் ... போராட்­டம்: விலை எகி­றும் போராட்­டம்: விலை எகி­றும் ...
சந்­தே­கத்­துக்கு இடம் கொடா­தீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2018
00:41

வீடி­யோ­கான் நிறு­வ­னத்­துக்கு கடன் கொடுத்­த­தில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் தலை­வர், சந்தா கோச்­சா­ரின் குடும்­பம் கைமாறு பெற்­றதா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்­வா­கம், இதை முற்­றி­லும் மறுத்து, அவர் மீது முழு நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது. ஆனா­லும், எழுப்­பப்­படும் கேள்­வி­களும் சந்­தே­கங்­களும் நம் கவ­னத்­தைக் கவ­ரவே செய்­கின்றன.கிண­று­வெட்ட பூதம் கிளம்­பி­ய­தாக ஒரு பழ­மொழி உண்டு. வாராக் கடன் என்ற கிண­று­வெட்ட ஆரம்­பித்­த­வு­டன், ஒரு பூதம் அல்ல; பல பூதங்­கள் வெளியே கிளம்பி வந்­து­கொண்டு இருக்­கின்றன. வீடி­யோ­கா­னும் அதில் ஒன்று.

கிட்­டத்­தட்ட 49,000 கோடி ரூபாய் கடனை நிலு­வை­யில் வைத்­துள்­ளது, இந்­நி­று­வ­னம்.
அதில், 29,000 கோடி, இந்­திய வங்­கி­களில் வாங்­கப்­பட்­டவை. மிச்­சம் 20,000 கோடி, வெளி­நாட்டு வங்­கி­களில் இருந்து பெறப்­பட்­டவை.2ஜி அலைக்­கற்றை உரி­மத்தை இழந்­த­தி­லும் ரியல்­எஸ்­டேட் துறை­யில் ஈடு­பட்டு, கையைச் சுட்­டுக்­கொண்­ட­தி­லும், வீடி­யோ­கா­னுக்­குப் பெருத்த நஷ்­டம்.

தற்­போது வாராக் கடன் நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில் வீடி­யோ­கா­னும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு துணை நிறு­வ­னத்­தை­யும் சொத்­து­க­ளை­யும் விற்று, கடனை அடைத்­துக்­கொண்டு வரு­கிறது இந்த நிறு­வ­னம்.ரூ.64 கோடி முதலீடுவீடி­யோ­கா­னுக்கு, 20 வங்­கி­களின் கூட்­ட­மைப்பு கடன் கொடுத்­தது. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யும் ஒன்று. சுமார், 3,250 கோடி ரூபாய் கடன் வழங்­கப்­பட்­டது. அதில், 86 சத­வீ­தம், அதா­வது 2,810 கோடி ரூபாய் திரும்பி வாராக் கடன் ஆகி­விட்­டது. இதை எப்­படி வசூ­லிப்­பது என்­பது இன்­னொரு பெரிய கவலை.

இதே­ச­ம­யத்­தில் வேறொரு டிராக்­கில் வேறொரு கதை ஓடிக்­கொண்­டி­ருக்­கிறது. அதைப் புரிந்­து­கொண்டு இங்கே மீண்­டும் வரு­வோம்.
கடன் கொடுத்த, ஐ.சி.ஐ.சி.ஐ., நிறு­வ­னத்­தின் தலை­வர் சந்தா கோச்­சா­ரின் கண­வர் தீபக் கோச்­சா­ரும், வீடி­யோ­கான் நிறு­வ­னத் தலை­வர் வேணு­கோ­பால் துாத்­தும் டிசம்­பர் 2008ல் ’நுப­வர்’ என்­றொரு நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னர்.தொடங்­கிய சில மாதங்­க­ளி­லேயே துாத், நுப­வர் நிறு­வ­னப்பங்­கு­கள் அனைத்­தை­யும் தீபக்­குக்கே விற்­று­விட்­டார்.

பின்­னர், இந்த நுப­வர் நிறு­வ­னத்­தில், துாத் தலை­மை­யி­லான சுப்­ரீம் எனர்ஜி என்ற
நிறு­வ­னம் 64 கோடி முத­லீடு செய்­தது. அப்­போது சுப்­ரீம் எனர்ஜி நிறு­வ­னம் நுப­வ­ரின் பெரும்­பான்­மைப் பங்­கு­களை வைத்­தி­ருந்­தது. துாத், தன் பங்­கு­களை உற­வி­ன­ரான மகேஷ் சந்­திர புங்­கியா என்­ப­வ­ருக்­குக் கொடுத்­து­விட்­டார்.

இந்த மகேஷ் சும்மா இல்­லா­மல், தன்­னி­டம் வழங்­கப்­பட்ட பங்­கு­கள் அனைத்­தை­யும் பின்­னக்­கல் எனர்ஜி என்ற இன்­னொரு நிறு­வ­னத்­துக்­குக் கொடுத்­து­விட்­டார்.பின்­னக்­கல் நிறு­வ­னத்­தின் நிர்­வாக அறங்­கா­வ­லர் யார் தெரி­யுமா? சந்தா கோச்­சா­ரின் கண­வர் தீபக் கோச்­சாரே தான். அது­வும் மிக­வும் சல்­லி­சான விலைக்­குப் பங்குகள் கொடுக்­கப்பட்­டன.

அதா­வது தலை­யைச் சுற்றி, மீண்­டும் மூக்­கைத் தொட்­டு இருக்­கி­றார்­கள். நுப­வ­ருக்கு வீடி­யோ­கான் மூலம் லாபம். பயன் அடைந்­த­வர் தீபக் கோச்­சார்.கேள்­வி­கள்இப்­போது மெயின் பிக்­ச­ருக்கு வரு­வோம். இந்­தக் கொடுக்­கல் வாங்­கல் நடந்து­ கொண்­டி­ருந்­த­போ­து­ தான், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடி­யோ­கா­னுக்கு 3,250 கோடி ரூபாயை கட­னா­கக் கொடுத்­தது. அது­தான் இப்­போது வாராக்­க­ட­னா­கத் தொங்­கிக்­கொண்டு இருக்­கிறது.

தம் கண­வ­ரின் நிறு­வ­னத்­துக்கு உதவி செய்­த­தால்­தான், சந்தா கோச்­சார், வீடி­யோ­கான் நிறு­வ­னத்­துக்­குக் கடன் கொடுத்­தாரா என்ற கேள்வி எழுப்­பப்­ப­டு­கிறது. கடந்த, 2016 முதலே நுப­வர்,
சுப்ரீம் எனர்ஜி, பின்­னக்­கல் என்று ஒவ்­வொரு நிறு­வ­னத்­தை­யும் தொட்­டுத் தொட்டு ஆராய்ந்து, அக்­கு­வேறு ஆணி­வே­றாக விளக்கி, மத்­திய அர­சுக்­கும் பிர­த­ம­ருக்­கும் புகார் எழு­திய உண்­மை­ வி­ளம்­பி­யின் பெயர், அர­விந்த் குப்தா.

தற்­போது, வீடி­யோ­கான் நிறு­வ­ன­மும் வாராக் கடன் பட்­டி­ய­லில் இணைந்­த­வு­டன், அர­விந்த் குப்­தா­வின் சந்­தே­கங்­கள் மீண்­டும் புத்­து­யிர் பெற்­றுள்ளன.வீடி­யோ­கா­னுக்கு கடன் கொடுக்க ஒப்­பு­தல் வழங்­கிய, ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்­வா­கக் குழு­வில் அப்­போது சந்தா கோச்­சார் இல்லை; இது, 20 வங்­கி­களின் கூட்­ட­மைப்பு சேர்ந்து கொடுத்த கடன்; அதில், 10 சத­வி­கித அள­வுக்கே ஐ.சி.ஐ.சி.ஐ., கடன் உள்­ளது; இதற்­காக சந்தா கோச்­சார் எந்­த­வ­கை­யி­லும் கைமாறு பெற­வில்லை, முறை­த­வ­றி­யும் சகா­யம் செய்­ய­வில்லை என்று விளக்­கி­யுள்­ளது, ஐ.சி.ஐ.சி.ஐ., தரப்பு.

இதில் உண்மை இருக்­க­லாம். சந்தா கோச்­சார் அப்­ப­ழுக்­கற்ற நேர்­மை­யோடு நடப்­ப­வ­ராக இருக்­க­லாம்.ஆனா­லும், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான ‘செபி’, ஐ.சி.ஐ.சி.ஐ., பின்­பற்­ற­வேண்­டிய நிர்­வாக ரீதி­யான அறக்­கோட்­பா­டு­க­ளைப் பின்­பற்­றி­யுள்­ளதா என்­பதை
ஆரா­யப் புகுந்­துள்­ளது இங்கே கவ­னிக்­கத்­தக்­கது.

இது முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை. பாருங்­கள், சென்ற வாரம் கூட, கர்­நா­டக வங்கி திடீ­ரென்று விழித்­துக்­கொண்டு, கீதாஞ்­சலி ஜெம்ஸ் நிறு­வ­னம் எங்­களை, 86.47 கோடி ரூபாய் ஏமாற்­றி­விட்­டது என்று புகார் தெரி­வித்­துள்­ளது.உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் கர்­நா­டக வங்­கி­யின் பெய­ரில் போலி­யாக வங்­கிக் கிளை நடத்­தி­ய­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதெல்­லாம் வங்கி அதி­கா­ரி­க­ளு­டைய உத­வி­யில்­லா­மல் நடந்­தி­ருக்க வாய்ப்­புண்டா என்ன? நிரவ் மோடி மற்­றும் கீதாஞ்­ச­லி­யின் மெகுல் சொக்­ஸி­யின் மோச­டி­கள் அம்­ப­ல­மான உட­னேயே பத­றி­யி­ருக்க வேண்­டாமா கர்­நா­டக வங்கி? சுமார் ஒரு மாதம் கழித்து வாய் திறப்­பது என்ன நியா­யம்?

தவ­று­கள் நடப்­பது தெரிந்­தும், கள்­ள­மெ­ள­னம் சாதிப்­பது ஏன்?ஆர்.பி.ஐ., வாராக் கடன் தொடர்­பாக கிடுக்­கிப் பிடி உத்­த­ர­வு­க­ளைப் போட்­ட­தால்­தான், ஒவ்­வொரு வங்­கி­யும் மெது­மெ­து­வாக உண்­மை­களை வெளி­யி­டத் தொடங்­கி­யுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., – வீடி­யோ­கான் விவ­கா­ரத்­தை­யும் இந்­தப் பின்­ன­ணி­யில் இருந்­து­தான் பார்க்­க­வேண்­டும்.

பொதுத் துறை வங்­கி­கள் போல் தனி­யார் வங்­கி­களில் மோச­டி­கள் நடை­பெ­றா­மல் இருக்­க­லாம். ஆனால், தொழில்­து­றை­யி­ன­ரோ­டும் பெரிய மனி­தர்­க­ளோ­டும் தேவைக்கு அதி­க­மாக இணக்­கம் காட்­டு­வது, சலு­கை­கள் வழங்­கு­வது, நீக்­குப்­போக்­கு­டன்செயல்­ப­டு­வது ஆகி­யவை ஆபத்­தான சரி­வுப் பாதை.பெரிய நிறு­வ­னங்­க­ளோடு பழ­கும்­போது, தங்­க­ளுக்­கென்று வகுக்­கப்­பட்ட எல்­லைக்­கோட்­டுக்­குள் நின்று வங்­கி­கள் செய­லாற்­று­வதே, மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கையை மேம்­ப­டுத்­தும். இல்­லை­யெ­னில், தேனை வழித்­த­வன், புறங்­கையை நக்­கா­மல் போவானா என்ற அவப்­பேச்சு எழவே செய்­யும்.

சீஸ­ரின் மனைவி சந்­தே­கத்­துக்கு அப்­பாற்­பட்­ட­வ­ராக இருக்­க­ வேண்­டும் என்ற வரி வங்­கித் துறைக்­கும் பொருந்­தும்.

ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)