பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:48
புதுடில்லி:கிரிஸ்டல் கிராப் புரொடக் ஷன் நிறுவனம், வேளாண் துறை சார்ந்த, இடு பொருட்கள், சாதனங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த பின், ‘செபி’ புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீடு வாயிலாக, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.
பங்கு வெளியீட்டு பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், எச்.எஸ்.பி.சி., செக்யூரிட்டிஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைசரி அண்ட் செக்யூரிட்டிஸ் இந்தியா, எஸ்.எம்.சி., கேப்பிட்டல் ஆகியவை நிர்வகிக்க உள்ளன.‘செபி’ அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|