பதிவு செய்த நாள்
25 ஏப்2018
00:53
புதுடில்லி : மத்திய அரசு, பொது துறையைச் சேர்ந்த, மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கையை துவக்கிஉள்ளது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது காப்பீட்டு வணிகத்தில் உள்ள, ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ்’ நிறுவனங்களை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, இரு முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அடுத்து வரும் கூட்டங்களில், இணைப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் முன்னேற்றம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்கள், 2016 -– 17ம் நிதியாண்டில், 44 ஆயிரம் கோடி ரூபாய் பிரீமியம் திரட்டியுள்ளன. பொது காப்பீட்டு துறையில், இந்நிறுவனங்களின் பங்கு, 35 சதவீதமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில், பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை அடைவதற்கு, இணைப்பு நடவடிக்கைக்கு பின், பொது காப்பீட்டு துறையில் உருவாகும், மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனம் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|