பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:12
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 27வது கூட்டம், மே 4ல் நடைபெற உள்ளது.
சமீபத்தில், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள, அருண் ஜெட்லி, மருத்துவர்கள் அறிவுரைப்படி, தன் அலுவலகத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், இக்கூட்டத்தில் உரையாற்றுவார். ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கு, ஒரே படிவ முறையை அறிமுகப்படுத்துவது குறித்து, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, ஏற்கனவே, பீஹார் துணை முதல்வர் சுஷில் மோடி தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளை, ஜி.எஸ்.டி., குழு பரிசீலிக்கும்.
அத்துடன், ஜி.எஸ்.டி., நடைமுறையை நிர்வகிக்கும், ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை, பொது துறை நிறுவனமாக மாற்றுவது குறித்தும், இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது, இந்நிறுவனத்தில், தனியார் நிறுவனங்களின் பங்கு மூலதனம், 51 சதவீதமாக உள்ளது; அரசின் பங்கு மூலதனம், 49 சதவீதமாக உள்ளது. இதை, 100 சதவீதமாக உயர்த்தி, பொது துறை நிறுவனமாக மாற்ற, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|