பதிவு செய்த நாள்
07 மே2018
00:32
வங்கிகளில் கடன் பெறுவதை தீர்மானிக்கும் அம்சங்களில் கிரெடிட் அமைப்புகள் வழங்கும், ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும், கடன் தகுதி மதிப்பெண் முக்கிய அங்கம் வகிக்கிறது. சிபில் உள்ளிட்ட கடன் தகுதி சேவை அமைப்புகள் இதற்கான கடன் தகுதி அறிக்கையை வழங்குகின்றன. இவற்றை ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பெறலாம்.
சிபில் அறிக்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை அறிந்திருப்பது அவசியம். சிபில் அறிக்கையில் சிபில் ஸ்கோர் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்த மதிப்பெண் பொதுவாக, 300 முதல் 900 வரை அமைகிறது. அதிக மதிப்பெண் இருப்பது கடன் தகுதி அதிகமாக இருப்பதை குறிக்கும். கடன் தகுதி அறிக்கையில் உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிகள் உள்ளிட்டவற்றிடம் இருந்து பெறப்படுகின்றன. அறிக்கையின் தனிப்பட்ட தகவல்கள் பிரிவில் பெயர், பிறந்த தேதி, பாலினம், பான் எண், ஆதார் எண் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
தொடர்பு பகுதியில் தொலைபேசி எண், இ–மெயில் முகவரி, வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். பணி எனும் பிரிவில் அலுவலக வேலை அல்லது சுய தொழில் தொடர்பான தகவல்களை காணலாம். கணக்கு பகுதியில் வாடிக்கையாளர் வாங்கியுள்ள கடன்கள், வைத்துள்ள கிரெடிட் கார்டுகள் ஆகிய தகவல்களை காணலாம். கடன் தவணை நிலுவை விபரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பொதுவாக அதிக கிரிக்கெட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் என கருதப்படுகிறது. மேலும் கிரெடிட் அறிக்கையில் பல காரணங்களினால் தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கலாம். தவறான தகவல்கள் இருந்தால் அதை கண்டறிந்து திருத்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|