பதிவு செய்த நாள்
10 மே2018
00:26
புதுடில்லி:வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்கும், ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இரு தரப்பிலும், ஒன்றரை ஆண்டுகளாக, மறைமுக பேச்சு நடந்து வந்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, நேற்று, முறைப்படி அறிவிப்பு வெளியானது.பிளிப்கார்ட் நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை, 1,600 கோடி டாலருக்கு வால்மார்ட் வாங்குகிறது. இது, ரூபாய் மதிப்பில், 1.07 லட்சம் கோடி.உலகளவில், மின்னணு சில்லரை விற்பனை துறையில் மேற்கொள்ளப்பட்ட, அதிக மதிப்பிலான ஒப்பந்தம் இதுவாகும்.
பிளிப்கார்ட், 2,000 கோடி டாலர் மதிப்புள்ள வலைதள சந்தை நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், இந்திய மின்னணு வர்த்தகச் சந்தையில், அமேசானுக்கு கடும் போட்டியாக, வால்மார்ட் உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2007ல், சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் இணைந்து, 2007ல், பிளிப்கார்ட் நிறுவனத்தை தோற்றுவித்தனர். 30 ஆயிரம் பணியாளர்களுடன், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம்,தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|