பதிவு செய்த நாள்
10 மே2018
00:27
புதுடில்லி:கூர்கானைச் சேர்ந்த, ரென்யூ பவர் நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து தருதல், புதுப்பிக்கத்தக்க எரி சக்தி உற்பத்தி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் ஆவணங்களைசமர்ப்பித்துள்ளது.இந்த பங்கு வெளியீடு மூலம், ரென்யூ பவர் நிறுவனம், 2,600 கோடி ரூபாய் திரட்ட உத்தேசித்துள்ளது.
இத்தொகை வாயிலாக, ஏற்கனவே வெளியிட்ட, ‘டிபென்சர்’களை திரும்பப் பெறவும், ஒரு சில நிறுவனங்களை கையகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.தற்போது, இந்நிறுவனம், 5.85 கிகாவாட் அளவிற்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிர்வகித்து வருகிறது.இந்நிறுவனத்தில், 2011 முதல், சர்வதேச நிறுவனங்களான, கோல்டுமேன் சாக்ஸ், அபுதாபி முதலீட்டு ஆணையம், கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம், ஜப்பானின் ஜெரா நிறுவனம் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் நிதியம் ஆகியவை, 6,696 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|