பதிவு செய்த நாள்
10 மே2018
00:28
ஐதராபாத்:என்.எஸ்.டி.எல்., எனப்படும் நேஷனல் செக்யுரிட்டிஸ் டிபாசிட்டரி நிறுவனம், விரைவில், ‘பேமன்ட் பேங்க்’ துவக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜி.வி.நாகேஸ்வரராவ் கூறியதாவது:நிறுவனம், குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை மட்டும் வழங்கும், ‘பேமன்ட் பேங்க்’ துவக்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது.இதையடுத்து, வங்கிப்பணிகளை துவக்குவதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். ஒரு மாதத்தில், அனுமதி டைத்துவிடும்.
இந்த வங்கி, ‘டிஜிட்டல்’பணப் பரிவர்த்தனைகளை இலக்காக கொண்ட, மின்னணு வங்கியாக செயல்படும். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும், 40 பல்கலைகழகங்களைச் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை, டிஜிட்டல் வடிவில், நிறுவனம் பராமரித்து வருகிறது.இதுவரை, 50 லட்சம் சான்றிதழ்கள், டிஜிட்டல் வடிவில், நிறுவனத்தின் பாதுகாப்பில் உள்ளனஇவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 1996ல் துவக்கப்பட்ட, என்.எஸ்.டி.எல்., நிறுவனம், முதலீட்டாளர்களின் பங்குகளை, மின்னணு வடிவில் பராமரித்து வருவதுடன், வருமான வரி துறையின், ‘பான் கார்டு’ உட்பட, இதர நிதிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|