பதிவு செய்த நாள்
14 மே2018
00:23
தேசிய பென்ஷன் திட்ட மான என்.பி.எஸ்., திட்டத் தில் பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஐந்து சிறிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, உயர் கல்வி மற்றும் தொழில் துவங்குவது ஆகியவற்றுக்காகவும், முன்கூட்டியே பகுதி அளவு தொகையை விலக்கி கொள்வது அனுமதிக்கப்படுகிறது.
பென்ஷன் நிதி ஆணையம் அண்மையில், என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக அறிவித்துள்ள மாற்றங்கள் பற்றிய விபரம் வருமாறு:என்.பி.எஸ்., திட்டத்தில் இணைந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பகுதி அளவு விலக்கல் அனுமதிக்கப்படுகிறது. உறுப்பினர் செலுத்திய தொகையில் 25 சதவீதத்திற்கு மிகாமல் உள்ள தொகையை விலக்கி கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்கள் வேலைவாய்ப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள உயர் கல்வி கற்க அல்லது தொழில்முறை பயிற்சி பெற விரும்பினால் அதற்காக இப்போது பகுதி அளவு தொகையை விலக்கி கொள்ளலாம். இந்த காரணங்கள் தவிர, புதிய தொழில் துவங்க அல்லது புதிய தொழிலை கையகப்படுத்தவும், பகுதி அளவு தொகையை விலக்கி கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
தனியார் துறை ஊழியர்கள் தங்கள் கணக்கில், சமபங்கு முதலீட்டை 75 சதவீதம் வரை மேற்கொள்ளலாம். இப்போது இது 50 சதவீதமாக இருக்கிறது. எனினும் சமபங்கு முதலீட்டிற்கான 50 சதவீத வயது வரம்பு பொருந்தும்.என்.பி.எஸ்., உறுப்பினர் திட்ட காலத்தில் மொத்தம் மூன்று முறை பகுதி அளவு தொகையை விலக்கி கொள்ள லாம். இதற்கான விண்ணப்பத்தை மத்திய ஆவண காப்பக ஏஜென்சிக்கு அல்லது நோடல் அலுவலகம் மூலம் என்.பி.எஸ் அறக்கட்டளையிடம் சமர்பிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|