பதிவு செய்த நாள்
02 ஜூன்2018
00:21
சென்னை:பள்ளி விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, காய்கறி விலை ஏறத் துவங்கியுள்ளது.கோயம்பேடு சந்தையில், ஒரு கட்டு, 2 ரூபாய்க்கு விற்ற கொத்தமல்லி நேற்று, 25 – 30 ரூபாய்க்கு விற்றது. அதே போல், புதினா, ஒரு கட்டு, 20 ரூபாய்க்கும்; கறிவேப்பிலை, 1 கிலோ, 20 ரூபாய்க்கும் விற்பனையாகின.தற்போதைய சந்தை நிலவரம் குறித்து,காய்கறி விற்பனையக ஆலோசகர் சவுந்திரராசன்கூறியதாவது:
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகிய வற்றின் விலை அதிகரித்துள்ளது. பச்சை பட்டாணி விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. தற்போது இதன் விலை, 1 கிலோ, 120 ரூபாயாக உள்ளது. பீன்ஸ், 1 கிலோ, 50 ரூபாய்; தக்காளி, 10 – 18 ரூபாய்; வெங்காயம், 15 ரூபாய்; கேரட், பச்சை மிளகாய், காலிபிளவர், முருங்கை, வெண்டை, கோவக்காய், சேனைக்கிழங்கு, கத்தரி, நுால்கோல் உள்ளிட்டவை, 20 – 25 ரூபாய்க்கும் விற்பனையாகின. முட்டைகோஸ், 15 ரூபாய்க்கும்; அவரைக்காய், 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், 35 ரூபாய்க்கும், குடை மிளகாய், 35 – 40 ரூபாய்க்கும் விற்பனையாகின.இவ்வாறு அவர் கூறினார்.
பழங்கள்
பழங்களை பொறுத்தவரை, மங்குஸ்தான், லிச்சி, ஊட்டி ஆப்பிள், மாம்பழம் ஆகிய பழங்களின் வரத்தும், விற்பனையும் களைகட்டியுள்ளது. லிச்சி, 1 கிலோ, 50 ரூபாயாகவும், ஊட்டி ஆப்பிள், 1 கிலோ, 160 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
மலைப்பிரதேசங்களில் இருந்து வந்துள்ள மங்குஸ்தான், 10 கிலோ கொண்ட பெட்டி, 1,100 – 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சாத்துக்குடி, 1 கிலோ, 60 – 80 ரூபாயாகவும்; மாம்பழம் தரத்துக்கு ஏற்ப, 1 கிலோ, 25 – 50 ரூபாயாகவும் விற்பனையாகின்றன.
மலர்கள்
மல்லி, ரோஜா வகைகளின் விலையும், வரத்தும் மக்கள் விரும்பும் வகையில் உள்ளது. மல்லி, 1 கிலோ, 200 ரூபாயாகவும்; ரோஜா, 1 கிலோ 60 ரூபாயாகவும் உள்ளன. பன்னீர் ரோஜா, 80 ரூபாயாக உள்ளது. மீண்டும் சாமந்தி வரத்து துவங்கியுள்ளது. இதன் விலை தற்போது, 50 – 80 ரூபாயாக உள்ளது. அலங்காரத்துக்கான டேரி மலர் சிறியது, 1 கிலோ, 80 ரூபாயாகவும்; சம்பங்கி, 30 ரூபாயாகவும்; கனகாம்பரம், 300 ரூபாயாகவும்; முல்லை, 60 ரூபாயாகவும் இருந்தன. அலரி, ஒரு பாக்கெட், 50 ரூபாயாக உள்ளது.ரோஸ், 1 கிலோ, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|