பதிவு செய்த நாள்
03 ஜூன்2018
00:18
புதுடில்லி:‘‘ரியல் எஸ்டேட் துறையில், கட்டுமான நிறுவனங்கள், வீடு வாங்குவோர் உள்ளிட்டோரின் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,’’ என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது:வீடு வாங்குவோரும், கட்டுமான நிறுவனங்களும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இரு தரப்பிலும் உள்ள பொதுவான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.இதற்காக, ஆலோசனை குழுக்கள் அமைக்கப்படும். ஏற்கனவே, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில், ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள், வீடு வாங்குவார், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை உருவாக்கும்.ஒரு சில கட்டுமான நிறுவனங்களின் மோசமான செயல்பாடுகள், ரியல் எஸ்டேட் துறைக்கு களங்கத்தை உண்டு பண்ணுகின்றன. அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|