பதிவு செய்த நாள்
03 ஜூன்2018
00:20
தனியார் இன்டர்நெட் மையங்களில், இம்மாத இறுதியில் அரசு இ – சேவை மையங்களை துவங்க, தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனதின் கீழ், அரசு இ – சேவை மையம், அரசு கேபிள், இல்லம் தோறும் இணையம் போன்ற சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.இதில், அரசு இ – சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், கலர் வாக்காளர் அட்டை பிரின்ட் செய்தல் உட்பட, 61-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்த சேவைகளை, தனியார் இன்டர்நெட் மையங்களிலும் வழங்க, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் திட்டமிட்டது. இந்த திட்டம் ஜூன் இறுதியில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு இ – சேவை மையத்தில், மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை, 15 கோடிக்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசின் சில சேவைகளை, தனியார் பொது சேவை மையங்கள் வழங்குகின்றன. ஆனால், அவை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொது மக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தனியார் இன்டர்நெட் மையங்களில், அரசு சேவைகளை வழங்க, அறிவிப்பு வெளியிட்டோம். இதற்கு, 3,000க்கும் மேற்பட்ட மையங்கள் விருப்பம் தெரிவித்தன.தற்போது, முதல் கட்டமாக, அனைத்து மாநகராட்சிகளிலும் உள்ள இன்டர்நெட் மையங்களில், அரசு இ – சேவை வழங்க திட்டமிட்டு, 680 மையங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்.இந்த சேவை, இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது. இதர மையங்களுக்கு, படிப்படியாக அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|