பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:43
சென்னை:கோயம்பேடு சந்தையில், பீன்ஸ், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து கிராக்கி இருந்ததால், விலை அதிகரித்து காணப்பட்டது.முகூர்த்த நாளை முன்னிட்டு, கோயம்பேடு காய்கறி சந்தையில், பீன்ஸ், பட்டாணிக்கு தொடர்ந்து கிராக்கி காணப்பட்டு, விலை அதிகரித்துஇருந்தது.
அதே போல், கொத்தமல்லி, புதினா போன்றவையும், ஒரு கட்டு அதிகபட்சம், 40 ரூபாய் வரை விற்றன.ஒரு கிலோ பீன்ஸ், முந்தைய நாள் விலையான, 50 ரூபாயிலிருந்து உயர்ந்து, நேற்று அதிகபட்சம், 70 ரூபாயாக விற்பனையானது. 35 ரூபாயிலிருந்து உயர்ந்த அவரைக்காய், 1 கிலோ, 40 ரூபாய்க்கு விற்றது. பீட்ருட், கேரட் பாகற்காய், முருங்கை, வெண்டை, கத்திரி, சவ்சவ், நுால்கோல், உருளை உள்ளிட்ட காய்கறிகள், 15 – 30 ரூபாய் வரை விற்றன. இஞ்சி அதிகபட்சமாக, 1 கிலோ, 120 ரூபாயாக உயர்ந்து விற்பனையானது. பட்டாணி, ரகத்திற்கு ஏற்ப, 80 – 120 ரூபாய் வரை உயர்ந்து இருந்தது.குறைந்தபட்சமாக சுரைக்காய், புடலங்காய், 1 கிலோ, 5 ரூபாயாக இருந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|