தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிறிய வங்கிகளின் வாராக்கடனை பெரிய வங்கிகளுக்கு மாற்ற திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2018
00:22

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த சிறிய வங்­கி­களின் வாராக் கடனை, பெரிய வங்­கி­க­ளுக்கு மாற்­று­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.
வாராக் கடன் தொடர்­பான விதி­மு­றை­களை, ரிசர்வ் வங்கி கடு­மை­யாக்­கி­யுள்­ளது. இதன் விளை­வாக, வங்­கி­களின் வாராக் கடன் அதி­க­ரித்து, அதற்­கான நிதி ஒதுக்­கீட்டை உயர்த்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது, வங்­கி­களின் லாபத்தை பதம் பார்த்து, இழப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், வாராக் கடன் சுமை கார­ண­மாக, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 12 வங்­கி­களை, தீவிர ஒழுங்கு நட­வ­டிக்கை பட்­டி­ய­லில், ரிசர்வ் வங்கி சேர்த்­துள்­ளது.இது தவிர, பல சிறிய வங்­கி­கள், பல­வீ­ன­மான நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து வாராக் கடனை வசூ­லிக்க முடி­யா­மல் விழி பிதுங்கி நிற்­கின்றன. இது போன்ற வங்­கி­களின் வாராக் கடன்­களை, பெரிய வங்­கி­க­ளுக்கு மாற்­று­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:

கடந்த, 2017 – -18ம் நிதி­யாண்­டில், வங்­கித் துறை­யின் வாராக் கடன், 8.50 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­யுள்­ளது. இதே காலத்­தில், வங்­கி­களின் மொத்த இழப்பு, 73 ஆயி­ரம் கோடி ரூபாயை எட்­டி­யுள்­ளது.பல வங்­கி­கள், ரிசர்வ் வங்­கி­யின் கடு­மை­யான விதி­மு­றை­க­ளால், வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்கி, இழப்பை சந்­தித்­துள்ளன. இதன் கார­ண­மாக, வங்­கி­கள், நிதி­யா­தா­ரத்தை சமா­ளிக்க, மியூச்­சு­வல் பண்டு உள்­ளிட்ட பிற துறை­களில் செய்­துள்ள முத­லீ­டு­களை திரும்­பப் பெறத் துவங்­கி­உள்ளன.

மத்­திய நிதி­ய­மைச்­ச­க­மும், மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், வங்­கி­க­ளுக்கு, நடப்பு நிதி­யாண்­டில், 65 ஆயி­ரம் கோடி ரூபாய் தான் ஒதுக்க முடி­யும் என, திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து விட்­டது.வாராக் கடன் சுமை; பங்கு மூல­தன தேவையை சமா­ளிக்க, பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்ள முடி­யாத நிலை; லாபத்­தில் சரிவு, இழப்பு என, பல வகை­யில் வங்­கி­கள் திண­றிக் கொண்­டி­ருக்­கின்றன.

அத­னால், பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களில், சிறிய வங்­கி­களை தேர்வு செய்து, அவற்­றின் வாராக் கடன்­களை, பெரிய வங்­கிக்கு மாற்­றும் திட்­டம், பரி­சீ­ல­னை­யில் உள்­ளது.இதன் மூலம், வாராக் கடன் சுமை­யில் இருந்து சிறிய வங்­கி­கள் விடு­படும். அத்­து­டன், ரிசர்வ் வங்­கி­யின் விதி­மு­றை­களை பின்­பற்­றத் துவங்­கி­யுள்­ள­தால், எதிர்­கா­லத்­தில் வாராக் கடன் பிரச்னை தவிர்க்­கப்­படும்.

குறிப்­பாக, ஆந்­திரா வங்கி, தேனா வங்கி போன்ற சிறிய வங்­கி­களின், வாராக் கடன்­களை மாற்­ற­லாம். கடன் மீட்பு வங்கி குழு­வில் இந்த வங்­கி­கள் இடம் பெற்­றுள்ள போதி­லும், இவற்­றின் வாராக் கடன், 5 சத­வீத அள­விற்கே உள்­ளது.அத­னால், இவ்­வங்­கி­களின் வாராக் கடனை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற பெரிய வங்­கி­க­ளுக்கு மாற்­ற­லாம். விரை­வில், இத்­திட்­டம் குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் வாய்ப்­புள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

ரிசர்வ் வங்கி, வாராக் கடன் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள் அடிப்­ப­டை­யில், ஐ.டி.பி.ஐ., சென்ட்­ரல் பேங்க் ஆப் இந்­தியா, ஐ.ஓ.பி., அல­கா­பாத் வங்கி, பேங்க் ஆப் இந்­தியா உட்­பட, 12 வங்­கி­களை, ஒழுங்கு நட­வ­டிக்கை பட்­டி­ய­லில் இணைத்­துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)