சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவுசேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ... ரெப்போ வட்டி அதிகரிப்பு : உயர்கிறது வீடு, வாகன கடன் வட்டி விகிதம் ரெப்போ வட்டி அதிகரிப்பு : உயர்கிறது வீடு, வாகன கடன் வட்டி விகிதம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி வாராக் கடன் 11.5 சதவீதமாக உயரும் ‘கிரிசில்’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2018
00:38

மும்பை:‘வங்­கித் துறை­யின் வாராக் கடன், நடப்பு நிதி­யாண்­டில், 11.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்’ என, ‘கிரி­சில்’ நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கடந்த, 2016 – -17ம் நிதி­யாண்­டில், வங்­கித் துறை­யின் மொத்த கட­னில், வாராக் கடன், 9.5 சத­வீ­த­மாக, அதா­வது, 8 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.
குறையும்
இது, இந்­தாண்டு மார்ச்­சு­டன் முடி­வ­டைந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், 11.2 சத­வீ­த­மாக அதி­க­ரித்து, 10.3 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், வங்­கித் துறை­யின் வாராக் கடன், 0.3 சத­வீ­தம் உயர்ந்து, 11.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வரும் நிதியாண்டில் வங்­கித் துறை­யின் வாராக் கடன் குறை­யும். மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் எடுத்து வரும் நட­வ­டிக்­கை­க­ளால், இது சாத்­தி­ய­மா­கும்.
கடந்த நிதி­யாண்­டில், வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கி­ய­தால், வங்­கி­க­ளுக்கு, 40 ஆயி­ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டது.முந்­தைய, 2016 – -17ம் நிதி­யாண்­டில், 5 லட்­சம் கோடி ரூபாய், வாராக் கட­னாக மாறி­யது. கடந்த மூன்று நிதி­யாண்­டு­களில், வங்கி வாராக் கடன், 13.60 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
கடந்த நிதி­யாண்­டில், ரிசர்வ் வங்­கி­யின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள், புதிய விதி­மு­றை­கள் கார­ண­மாக, பல வங்­கி­களின் கடன்­கள், வாராக் கடன் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டன. இத்­த­கைய கடன்­கள், வங்­கி­களின் வாராக் கட­னில், ஐந்­தில் ஒரு பங்­கா­கும்.மத்­திய அர­சின் திவால் சட்­டம் அம­லுக்கு வந்­ததை அடுத்து, வங்­கி­களின் வாராக் கடன்­க­ளுக்கு விரை­வாக தீர்வு காணும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், வங்­கித் துறை­யின் வாராக் கடன் வளர்ச்சி வேகம் குறைந்­துள்­ளது. வாராக் கடன் வசூ­லும் மெல்ல உய­ரும் அறி­குறி தென்­ப­டு­கிறது.
உருக்கு
குறிப்­பாக, கடந்த நிதி­யாண்­டில், 60 – -90 நாட்­க­ளுக்கு மேலாக தவணை செலுத்­தாத கணக்­கு­கள், 0.8 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்ளன. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 2 சத­வீ­த­மாக இருந்­தது.தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், மறு­சீ­ர­மைப்பு திட்­டத்­தின் கீழ், வங்­கி­களின், 3.30 லட்­சம் கோடி ரூபாய் இடர்ப்­பாட்டு கடன்­களை வசூ­லிக்க விண்­ணப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதில், நான்­கில் ஒரு பங்கு கடன், உருக்கு துறை­யி­டம் வசூ­லிக்க வேண்­டி­யுள்­ளது.
தற்­போது, உருக்கு துறை வளர்ச்சி காணத் துவங்­கி­யுள்­ள­தால், கடன்­களும் விரை­வாக பைச­லா­கும் வாய்ப்­புள்­ளது. இத்­த­கைய அம்­சங்­கள், வரும் நிதி­யாண்டு முதல், வங்­கி­களின் வாராக் கடன் குறைய வழி வகுக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
கூடுதல் உதவி தேவை
பொதுத் துறை வங்­கி­கள், ‘பேசல் 3’ விதி­மு­றை­களை பின்­பற்ற, மத்­திய அர­சின் பங்கு மூல­த­னத்தை சார்ந்­துள்ளன. வங்­கி­கள், கடந்த நிதி­யாண்டை போல, நடப்பு நிதி­யாண்­டி­லும், வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யும் சூழல் உள்­ளது. அத­னால், மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­படும், 2.10 லட்­சம் கோடி ரூபாய், வங்­கி­களின் தேவையை பூர்த்தி செய்­யக் கூடிய அள­விற்கு இருக்­காது.
கிருஷ்ணன் சீதாராமன், மூத்த இயக்குனர், கிரிசில்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)