பதிவு செய்த நாள்
09 ஜூன்2018
00:40
பெங்களூரு:ஐ.நா.இந்திய வர்த்தக கூட்டமைப்பு, ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆகியவை இணைந்து, பெண்கள், தொழில் துவங்குவதற்கு உதவும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.இது குறித்து, வெளியிடப் பட்டுள்ள கூட்டறிக்கை:
இந்தியாவில்,பெண் தொழில்முனைவோருக்கு, முதலீட்டாளரை அணுகு வதும், முதலீட்டை திரட்டுவதும் சவாலான அம்சங்களாக உள்ளன.வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், முதலீடுகளை திரட்டுவதில் பாலின பாகுபாடுகளை எதிர்கொள்கின்றன.
இத்தகைய போக்கை கட்டுப்படுத்தவும், பெண் தொழில்முனைவோருக்கு தேவையான முதலீடுகள், தொழில்நுட்ப உதவிகள், ஒருங்கிணைந்த சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ‘பெண் தொழில்முனைவோருக்கான, ஐ.நா., இந்தியா – நிடி ஆயோக் முதலீட்டு அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, மாநில அரசுகள், தனியார் துறை பங்குதாரர்கள், துணிகர முதலீட்டாளர்கள், சர்வதேச நன்கொடையாளர்கள், நிதி அமைப்புகள் உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைந்த சேவைகளை, பெண் தொழில்முனைவோர் பெறுவதற்கு பாடுபடும்.சர்வதேச மற்றும் ஐ.நா., பெண்கள் முன்னேற்ற அமைப்புகள், பெண் தொழில்முனைவோரை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும்.தேர்வாகும் பெண் தொழில்முனைவோரின் திட்டங்களுக்கு தேவையான உதவிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகள் வாயிலாக ஏற்படுத்தி தரப்படும்.
தொழில்நுட்ப அறிவு, தேவையான முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பதால், பெண்கள் ஆர்வத்துடன் தொழில் துவங்க முன்வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஆண்களுக்கு நிகராக, பெண்களின் பங்களிப்பு உயர வேண்டும்.
அவ்வாறு உயரும்பட்சத்தில், 2025ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.9 லட்சம் கோடி டாலர் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி – தொழில்நுட்பம் – சந்தை வாய்ப்பு
பெண் தொழில்முனைவோருக்கான, ஐ.நா., இந்தியா – நிடி ஆயோக் முதலீட்டு அமைப்பில் நிதியுதவி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்க, எச்.டி.எப்.சி., --– ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., உள்ளிட்டவை இணைந்துள்ளன.இவற்றுடன், கடிலா பர்மா, பிலிப்ஸ் இந்தியா, டாடா கெமிக்கல்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|