பதிவு செய்த நாள்
11 ஜூன்2018
00:38
வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும், ‘டெபாசிட்’ உள்ளிட்ட தொகை என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த தொகை இதற்கென உள்ள தனி நிதிக்கு மாற்றப்படும். இந்த தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருக்கும் சேமிப்பு கணக்குகளில் இருக்கும் தொகை அல்லது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாத தொகை அல்லது டெபாசிட், கோரப்படாத தொகையாக கருதப்படும். இந்த தொகை டெபாசிட்தாரர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பத்தாண்டு காலம் முடிந்த மூன்று மாதத்தில் கோரப்படாத தொகை, இந்த நிதிக்கு கிரெடிட் செய்யப்படும். இவ்வாறு மாற்றப்படும் தொகை, டெபாசிட்தாரர்கள் நலன் தொடர்பான விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்படும்.
எனினும், டெபாசிட்தாரர் அல்லது உரியவர்கள் இந்த தொகையை கோரினால், வங்கிகள் கோரப்படாத தொகை அல்லது டெபாசிட்டை திருப்பி அளிக்க வேண்டும்.டெபாசிட்தாரர் நிதிக்கு மாற்றப்பட்ட பிறகும், வங்கிகள் இந்த தொகை கோரப்படும் போது திருப்பி அளிக்க வேண்டும். இதற்கான வட்டித்தொகையை ரிசர்வ் வங்கி அவ்வப்போது நிர்ணயிக்கும். தற்போது இது, 4 சதவீதமாக உள்ளது. 2018 ஜூலை 1ம் தேதி முதல் இது, 3.5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது
.ரிசர்வ் வங்கி தகவலின் படி, 2016 டிசம்பர் வரை அனைத்து வங்கிகளிலும், 2.63 கோடி கணக்குகளில், 8,864.6 கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது. 2012க்கு பின், நான்கு ஆண்டுகளில் இது இரு மடங்காகி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|