பதிவு செய்த நாள்
13 ஜூன்2018
00:19
காரிமங்கலம்:காரிமங்கலம் வாரச் சந்தையில், இரண்டு கோடியே, 25 லட்சம் ரூபாய்க்கு, மாடுகள் விற்பனையாகின.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், நேற்று கூடிய சந்தையில், கறுப்பு, வெள்ளை மாடுகள், ஜெர்சி, சிந்துமாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் ஆகியவற்றை விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கறுப்பு, வெள்ளை மாடு ஒன்று, 47- – 81 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 39 – 62 ஆயிரம் ரூபாய், சிந்து, 40 – 56 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு, 40 – 82 ஆயிரம் ரூபாய், எருமை, 20 – 35 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையாகின.தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.‘மொத்தம், 800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையானதால், 2 கோடியே, 25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|