பதிவு செய்த நாள்
30 ஜூன்2018
00:32
பொள்ளாச்சி: ‘‘தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதியை, மூன்று மடங்காக உயர்த்த கயிறு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது,’’ என, பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில், ‘தேசிய கயிறு வாரிய கொள்கை மற்றும் திட்டமிடல்’ குறித்து ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.தென்னை நார் பொருட்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘கயிறு மெத்தை தயாரிப்புக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்குரிய வழிவகை செய்ய வேண்டும்,’’ என்றார்.
கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:தென்னை நார் உற்பத்தியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கயிறு வாரிய கொள்கை மற்றும் திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்கு முன், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் பிரச்னைகள், குறைபாடுகள் குறித்து கருத்து கேட்டறிய கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, தமிழகத்துக்கு ஒரு கூட்டுக்குழுமம் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரியில் துவங்கும் கூட்டுக்குழுமத்தின் மொத்த முதலீடு, மூன்று கோடியே, 87 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய். மத்திய அரசு மானியம், 75 சதவீதம் வழங்கப்படுகிறது.கடந்த, 60 ஆண்டுகளில் இருந்த தென்னை நார் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, கடந்த நான்கு ஆண்டில், இரண்டு மடங்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை மேலும், மூன்று மடங்காக உயர்த்த கயிறு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கயிறு பொருட்களை பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|