பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:13
திருப்பூர்:‘‘மக்கள் ரசனைக்கு தகுந்தபடி அனைத்து துறைகளிலும், புதுமையை புகுத்த வேண்டியது அவசியம்,’’ என, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன தலைவர், இறையன்பு பேசினார்.
திருப்பூர், ‘நிப்ட் – டீ’ கல்லுாரியில், புதிய தொழில் முனைவோருக்கான பயிற்சி கூட்டம், நேற்று துவங்கியது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு பேசியதாவது:
தொழில் சார்ந்த வளர்ச்சியால், சமுதாயம் பயனடையும். மக்களின் ரசனை மாறியுள்ளதால், அனைத்து துறைகளிலும், புதுமையை புகுத்த வேண்டியது அவசியம். அதற்கு இளைஞர்களுக்கு, வாய்ப்பை உருவாக்கி கொடுத்து, ஊக்கப்படுத்த வேண்டும்.ஆடை தயாரிப்பில், புதுமை ஏற்படுத்த வேண்டுமெனில், புதிய தொழில் முனைவோர், மூன்று சவால்களை சந்திக்க தயாராக வேண்டும். உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை மாறி வருகிறது.
அதற்கு ஏற்ற வகையில், பொருட்களை உற்பத்தி செய்து, மக்களுக்கு வழங்க வேண்டும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சவாலாக இருப்பதால், நிறுவனத்தில், ஆபத்தான பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பொருட்களை உருவாக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில், கழிவுகள் உருவாவதை குறைக்கவும், மறுசுழற்சி முறையில், பயன்படுத்தவும் திட்டமிட வேண்டும். மூன்று சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், சரியாக திட்டமிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், பொதுச் செயலர் விஜயகுமார் உட்பட பலர், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறித்து பேசினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|