பதிவு செய்த நாள்
04 ஜூலை2018
00:14
திருப்பூர்:மும்பையில் நடக்கும் சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் பங்கேற்க, ஆயத்த ஆடை தொழில் துறையினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.இது குறித்து, திருப்பூரில் நடந்த கூட்டத்தில், இந்தியா, ஐ.டி.எம்.இ., சொசைட்டி தலைவர் ஹரிசங்கர் கூறியதாவது:
‘இன்டியா இட்மா’ சொசைட்டி சார்பில், 2வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி, மும்பையில், 2019 ஜன.,18 முதல், 20 வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், எகிப்து, வங்கதேசம், கொரியா, உஸ்பெக்கிஸ்தான், ஈரான், இலங்கை மற்றும் பிற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்பர்.
சர்வதேச அளவில், இட்டோமா வீவிங், டோர்னியர், ஸ்டப்ஸி, லைப் பான்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஜவுளி தொழில் நுட்பம், ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி தொழில் பற்றிய கருத்தரங்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தருவதாக அமையும்.உலகின் இரண்டாவது பெரிய ஜவுளி சந்தையாக திகழும் இந்தியாவில், அனைவரும் பயன்பெற இது ஓர் அரிய வாய்ப்பு.
ஆயத்த ஆடைக்கு புகழ்வாய்ந்த திருப்பூர், மேலும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|