வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதம் சரிய வாய்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:13
மும்பை:நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், ஆடை ஏற்றுமதி, 10 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளதாக ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, இதன் தலைவர் ராகுல் மேத்தா கூறியதாவது:கடந்த ஆண்டு, அக்டோபர் முதல், ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்து வருகிறது. ஜி.எஸ்.டி.,யில், செலுத்திய வரியை திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இதற்கு காரணம்.இந்தியாவின் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியில், பருத்தி ஆடையின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக, பருத்தி விலை, 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2017- - 18ம் நிதியாண்டில், ஆயத்த ஆடை ஏற்றுமதி, 4 சதவீதம் குறைந்து, 1,670 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, 2016- - 17ல், 1,738 கோடி டாலராக இருந்தது.நடப்பு, 2018 - 19ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஆயத்த ஆடை ஏற்றுமதி, மாதம், சராசரியாக, 8-10 சதவீதம் குறைந்து வருகிறது. அதனால், நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி, 10 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் ஜவுளி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 06,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 06,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 06,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 06,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!