பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
17:09
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் புதிய உச்சத்துடன் துவங்கி, புதிய உச்சத்துடனேயே நிறைவு பெற்றன.
முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமுமே இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்பட்சமாக 36,902.06 வரை வர்த்தகமாகின. முன்னதாக 36,749.69 புள்ளிகள் எட்டியதே சென்செக்ஸின் அதிகப்பட்ச உச்சமாகும். அதை இன்றைய வர்த்தகம் முறியடித்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.50 புள்ளிகள் உயர்ந்து 36,825.10 எனும் புதிய உச்சத்தை தொட்டு நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 49.55 புள்ளிகள் உயர்ந்து 11,134.30-ஆக நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, ஆக்சிஸ், எச்டிஎப்சி., டாடா மோட்டார்ஸ், சன்பார்மா, ஐடிசி., உள்ளிட்ட பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|