பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:22
புதுடில்லி : நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு, வங்கிகள் கடன் வழங்குவது குறைத்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிப்பு :
இதன் தலைவர், பிரமோத் அகர்வால் கூறிய தாவது: நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு, வங்கிகள் கடன் வழங்குவதை குறைத்து விட்டன. கடன் கோருவோரிடம், சொத்துகளை பிணையமாக கேட்கின்றன. இதுவரை இல்லாத வகையில், பல்வேறு ஆவணங்களை கோருகின்றன. எந்தவொரு துறைக்கும் வங்கி கடனுதவிதான் மூச்சுக் காற்று போன்றது. தற்போது, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு, வங்கிகள் கடன் வழங்குவது, 10 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தாக்கத்தால், இத்துறையின் ஏற்றுமதி, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், 10 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஏற்றுமதி, 8.84 சதவீதம் குறைந்து, 1,110 கோடி டாலரில் இருந்து, 1,010 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எச்சரிக்கை :
வைர வியாபாரிகள், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோரின், 13 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடியை தொடர்ந்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு கடன் வழங்குவதில், வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|