தாமிர மூலப் பொருள் 40 சதவீதம் தட்டுப்பாடுதாமிர மூலப் பொருள் 40 சதவீதம் தட்டுப்பாடு ... ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தாது; எஸ்.பி.ஐ., கொள்கை அறிக்கை வெளியீடு ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தாது; எஸ்.பி.ஐ., கொள்கை அறிக்கை ... ...
ஆபரணங்கள், நவரத்தினங்கள் துறைக்கு வங்கி வழங்கும் கடனுதவி குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
23:22

புதுடில்லி : நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறைக்கு, வங்­கி­கள் கடன் வழங்­கு­வது குறைத்­துள்­ள­தாக, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

பாதிப்பு :
இதன் தலை­வர், பிரமோத் அகர்­வால் கூறி­ய ­தாவது: நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறைக்கு, வங்­கி­கள் கடன் வழங்­கு­வதை குறைத்து விட்­டன. கடன் கோரு­வோ­ரி­டம், சொத்­து­களை பிணை­ய­மாக கேட்­கின்­றன. இது­வரை இல்­லாத வகை­யில், பல்­வேறு ஆவ­ணங்­களை கோரு­கின்­றன. எந்­த­வொரு துறைக்­கும் வங்கி கட­னு­த­வி­தான் மூச்­சுக் காற்று போன்­றது. தற்­போது, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறைக்கு, வங்­கி­கள் கடன் வழங்­கு­வது, 10 சத­வீ­தம் குறைந்­துள்­ள­தாக மதிப்­பிடப்­பட்­டுள்­ளது. இத­னால், இத்­து­றை­யி­னர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதன் தாக்­கத்­தால், இத்­து­றை­யின் ஏற்­று­மதி, நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், 10 சத­வீ­தம் குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஏற்­க­னவே, ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், ஏற்­று­மதி, 8.84 சத­வீ­தம் குறைந்து, 1,110 கோடி டால­ரில் இருந்து, 1,010 கோடி டால­ராக சரி­வ­டைந்­து உள்ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

எச்சரிக்கை :
வைர வியா­பா­ரி­கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகி­யோ­ரின், 13 ஆயி­ரம் கோடி ரூபாய் வங்கி மோச­டியை தொடர்ந்து, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள் துறைக்கு கடன் வழங்­கு­வ­தில், வங்­கி­கள் மிகுந்த எச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­படு­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)