ஆபரணங்கள், நவரத்தினங்கள் துறைக்கு வங்கி வழங்கும் கடனுதவி குறைந்ததுஆபரணங்கள், நவரத்தினங்கள் துறைக்கு வங்கி வழங்கும் கடனுதவி குறைந்தது ... லாரி, ‘ஸ்டிரைக்’கால் வெங்காயம் விலை பாதிப்பு லாரி, ‘ஸ்டிரைக்’கால் வெங்காயம் விலை பாதிப்பு ...
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தாது; எஸ்.பி.ஐ., கொள்கை அறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
23:23

மும்பை : ‘ரிசர்வ் வங்கி, அடுத்த வாரம் வெளி­யிட உள்ள நிதிக் கொள்­கை­யில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கடனுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை உயர்த்த வாய்ப்­பில்லை’ என, எஸ்.பி.ஐ., பொரு­ளா ­தார வல்­லு­னர்­கள் தெரிவித்­துள்­ள­னர்.

ரிசர்வ் வங்கி, நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின், கடந்த ஜூன் 6ல், ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்தி, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது. இந்­நி­லை­யில், ஜூன் மாதம், நாட்­டின் சில்லரை பண­வீக்­கம், ஐந்து மாதங்களில் இல்­லாத வகை­யில், 5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, மே மாதம், 4.87 சத­வீ­த­மாக இருந்­தது.

கச்சா எண்ணெய் :
இது தவிர, ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம் போன்­ற­வற்­றால், ரிசர்வ் வங்கி, ஆக., 1ல் வெளி­யி­டும் நிதிக் கொள்­கை­யில், மீண்­டும் ரெப்போ வட்டி விகி­தத்தை உயர்த்­தும் என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, 'இக்ரா' தெரி­வித்­துள்­ளது. இதை, சில பொரு­ளா­தார வல்­லு­னர்­களும் ஆமோ­தித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ஆகஸ்­டில், ரெப்போ வட்டி உயர்த்­தப்­ப­டு­வ­தற்கு மிக குறை­வான வாய்ப்பே உள்­ளது. வட்­டியை உயர்த்­து­வதை விட, தற்­போ­துள்ள நிலையே நீடிப்­பது தான், சிறந்த தேர்­வாக இருக்­கும். ரூபாய் மதிப்பு சரிவை கட்­டுப்­ப­டுத்த, ரெப்போ வட்­டியை ரிசர்வ் வங்கி உயர்த்­தும் என்­பது தான், வல்­லு­னர்­கள் தெரி­விக்­கும் ஒரே கார­ணம்.

ஆனால், ஜூனில், சில்லரை பண­வீக்­கம், 5 சத­வீ­த­மாக உயர்ந்­தா­லும், மேலும் உய­ரா­மல், சம அள­வி­லேயே இருக்­கும் என, ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. வேளாண் பொருட்­களுக்கு உயர்த்­தப்­பட்ட, குறைந்­த­பட்ச ஆதார விலை­யால், சில்­லரை பண­வீக்­கம், 0.73 சத­வீத அள­விற்கே உய­ரும் ; அது­வும், புள்­ளி­வி­பர மதிப்­பீடு தானே தவிர, யதார்த்­தத்­தில் அவ்­வாறு இருக்­காது கரு­தப்­ப­டு­கிறது. ஏனெ­னில், குறைந்­த­பட்ச ஆதார விலை உயர்­வால், பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­படும் தாக்­கத்தை, தற்­போது கச்சா எண்­ணெய் விலை­யில் ஏற்­பட்டு வரும் சரிவு ஈடு செய்து விடும்.

மத்திய வங்கி :
எரி­சக்தி மற்­றும் உணவுப் பொருட்­கள் தவிர்த்து, இதர துறை பொருட்­க­ளின் விலை உயர்­வால், பண­வீக்கம் அதி­க­ரிக்­கும் என, சந்­தை­யா­ளர்­கள் கரு­து­கின்ற­னர். ஆனால், அது பர­வ­லான அள­விற்கு இருக்­காது. அதே­ச­ம­யம், சீரற்ற மழை பொழி­வால், உண­வுப் பொருட்­கள் விலை, குறிப்­பாக, தானி­யங்­கள் விலை உய­ரும்.

அமெ­ரிக்க மத்­திய வங்கி, மூன்­றா­வது முறை­யாக, செப்­டம்­ப­ரில் வட்டி விகி­தத்தை உயர்த்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பல நாடு­க­ளின் நிதிக் கொள்­கை­கள் குறித்து, திட­மாக தீர்­மா­னிக்க முடி­யா­த­படி, சர்­வ­தேச சூழல் உள்­ளது. இவற்­று­டன், உள்­நாட்­டில் பண­வீக்­கம் அதிக ஏற்ற­மின்றி, ஓர­ளவு ஸ்தி­ர­மாக இருக்­கும் என, கரு­தப்­ப­டு­வ­தால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்­டியை உயர்த்­தா­மல், பொறுத்­தி­ருந்து பார்க்­கும் என, தெரி­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

உயரும் :
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018-–19ம் நிதி­யாண்­டின், அடுத்த மூன்று காலாண்­டு­களில், 'ரெப்போ' வட்­டியை, 0.50 சத­வீ­தம் உயர்த்­தும்
-நரேஷ் தக்கர், நிர்வாக இயக்குனர், 'இக்ரா'

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)