சிமென்ட், ‘ஏசி, டிவி’க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., குறைகிறதுசிமென்ட், ‘ஏசி, டிவி’க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி., குறைகிறது ... ‘சிங்கப்பூரை பின்பற்றினால் இந்தியாவில் முதலீடு குவியும்’ ‘சிங்கப்பூரை பின்பற்றினால் இந்தியாவில் முதலீடு குவியும்’ ...
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை: ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் கருத்து கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
23:52

பெங்களூரு : ‘வேக­மாக வளர்ச்சி கண்டு வரும் நாடு­களில், நடப்­பாண்­டும் இந்­தியா முன்­னிலை வகிக்­கும்’ என, ‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம், கடந்த, 19 – -24 தேதி வரை, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், 70 பேரி­டம், இந்­திய பொரு­ளா­தா­ரம் குறித்து கருத்­துக் கணிப்பு நடத்­தி­யது. அதை தொகுத்து, நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தியா, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் பிரான்சை விஞ்சி, ஆறா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. இவ்­வ­ளர்ச்சி இந்­தாண்­டும் தொட­ரும். நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.4 சத­வீ­த­மாக உய­ரும். இது, 2019- – 20ல், 7.6 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும். அதே­ச­ம­யம், இந்­தாண்டு, சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6.6 சத­வீத அள­விற்கே இருக்­கும்.

பொது தேர்தல் :
இந்­தி­யா­வின் பொரு­ளா­தார முன்­னேற்­றம் சிறப்­பாக இருக்­கும் என்­ற­போ­தி­லும், கச்சா எண்­ணெய் விலை உயர்­வும், ரூபாய் மதிப்­பின் சரி­வும் தொடர்ந்­தால், வளர்ச்­சி­யில் தாக்­கம் ஏற்­படும். கச்சா எண்­ணெய் விலை, 10 டாலர் உயர்ந்­தால், பொரு­ளா­தார வளர்ச்சி, 0.3 – 0.4 சத­வீ­தம் குறை­யும். மூலப்­பொ­ருட்­கள் செல­வி­னம் அதி­க­ரிக்­கும். மக்­க­ளின் நுகர்வு குறை­யும். எனி­னும், நடப்பு நிதி­யாண்­டில், மத்­திய அரசு, பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­யும் நிதியை பொறுத்தே, இந்த தாக்­கம் இருக்­கும்.

அடுத்த ஆண்டு, பொதுத் தேர்­தல் வர உள்­ள­தால், அரசு திட்­டங்­க­ளுக்கு அதிக நிதி ஒதுக்­கப்­படும் என, தெரி­கிறது. இது, கிரா­மப்­புற பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உத­வும். அமெ­ரிக்­கா­வின் இறக்­கு­மதி வரி உயர்வு நட­வ­டிக்­கை­கள், ஆசிய பிராந்­திய நாடு­க­ளுக்கு கவலை அளிப்­ப­தாக உள்­ளன. இப்­பி­ரச்னை எந்த வகை­யில் செல்­லும் என்­பதை, தற்­போது கூற முடி­யாது. இத­னால், இந்­தி­யா­வுக்கு பெரிய அள­வில் பாதிப்பு இருக்­காது. ஆசி­யா­வின் பிற நாடு­களை ஒப்­பி­டும் போது, தாக்­கம் குறை­வா­கவே இருக்­கும்.

பணவீக்கம் :
ரிசர்வ் வங்கி, நடுத்­தர கால அள­வில் நிர்­ண­யித்­துள்ள, 4 சத­வீ­தத்தை தாண்டி, பண­வீக்­கம் உள்­ளது. இந்த உயர்வு, அடுத்த ஆண்டு, மார்ச் வரை இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இத­னால், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை, ரிசர்வ் வங்கி மீண்­டும் உயர்த்த வாய்ப்­புள்­ளது. இதற்­கான அறி­விப்பை, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு, ஆக., 1ல் வெளி­யி­டும் என எதிர்­பார்ப்­ப­தாக, 63 பேர் கருத்து தெரி­வித்­து உள்­ள­னர்.

இந்­தாண்டு இறுதி அல்­லது அடுத்த ஆண்டு மார்ச்­சுக்­குள் தான், வட்டி உயர்வு இருக்­கும் என, 22 பேர் தெரி­வித்­துள்­ள­னர். ஒரு­வர், அடுத்த ஆண்டு, மூன்­றா­வது காலாண்­டில் வட்டி உயர்வு இருக்­கும் என­வும், மூவர், 2019 இறுதி வரை வட்டி உய­ராது என்­றும் கூறி­யுள்­ள­னர். இவ்­வாறு அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

பண­வீக்­கம் உய­ரும் :
நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், சரா­ச­ரி­யாக, 4.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, மூன்று மாதங்­க­ளுக்கு முன், கருத்து கூறிய பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், தற்­போது, 4.9 சத­வீ­த­மாக உய­ரும் என, தெரி­வித்­துள்­ள­னர்.
-ராய்ட்டர்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)