பதிவு செய்த நாள்
27 ஜூலை2018
23:52
பெங்களூரு : ‘வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில், நடப்பாண்டும் இந்தியா முன்னிலை வகிக்கும்’ என, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், கடந்த, 19 – -24 தேதி வரை, பொருளாதார வல்லுனர்கள், 70 பேரிடம், இந்திய பொருளாதாரம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியது. அதை தொகுத்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் பிரான்சை விஞ்சி, ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வளர்ச்சி இந்தாண்டும் தொடரும். நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.4 சதவீதமாக உயரும். இது, 2019- – 20ல், 7.6 சதவீதமாக அதிகரிக்கும். அதேசமயம், இந்தாண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.6 சதவீத அளவிற்கே இருக்கும்.
பொது தேர்தல் :
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றபோதிலும், கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பின் சரிவும் தொடர்ந்தால், வளர்ச்சியில் தாக்கம் ஏற்படும். கச்சா எண்ணெய் விலை, 10 டாலர் உயர்ந்தால், பொருளாதார வளர்ச்சி, 0.3 – 0.4 சதவீதம் குறையும். மூலப்பொருட்கள் செலவினம் அதிகரிக்கும். மக்களின் நுகர்வு குறையும். எனினும், நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை பொறுத்தே, இந்த தாக்கம் இருக்கும்.
அடுத்த ஆண்டு, பொதுத் தேர்தல் வர உள்ளதால், அரசு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது. இது, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு நடவடிக்கைகள், ஆசிய பிராந்திய நாடுகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளன. இப்பிரச்னை எந்த வகையில் செல்லும் என்பதை, தற்போது கூற முடியாது. இதனால், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆசியாவின் பிற நாடுகளை ஒப்பிடும் போது, தாக்கம் குறைவாகவே இருக்கும்.
பணவீக்கம் :
ரிசர்வ் வங்கி, நடுத்தர கால அளவில் நிர்ணயித்துள்ள, 4 சதவீதத்தை தாண்டி, பணவீக்கம் உள்ளது. இந்த உயர்வு, அடுத்த ஆண்டு, மார்ச் வரை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பை, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு, ஆக., 1ல் வெளியிடும் என எதிர்பார்ப்பதாக, 63 பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்தாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தான், வட்டி உயர்வு இருக்கும் என, 22 பேர் தெரிவித்துள்ளனர். ஒருவர், அடுத்த ஆண்டு, மூன்றாவது காலாண்டில் வட்டி உயர்வு இருக்கும் எனவும், மூவர், 2019 இறுதி வரை வட்டி உயராது என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம் உயரும் :
நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நாட்டின் சில்லரை பணவீக்கம், சராசரியாக, 4.7 சதவீதமாக இருக்கும் என, மூன்று மாதங்களுக்கு முன், கருத்து கூறிய பொருளாதார வல்லுனர்கள், தற்போது, 4.9 சதவீதமாக உயரும் என, தெரிவித்துள்ளனர்.
-ராய்ட்டர்ஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|