பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:17
கிரெடிட் கார்டு பயனாளிகளில், தகுதி உள்ளோருக்கு, கார்டு நிறுவனங்கள் கடன் வரம்பை உயர்த்தி அளிக்க முன் வருகின்றன. கிரெடிட் கார்டு பயன்பாடு சீராக இருக்கும் போது, முறையாக தொகையை திரும்பி செலுத்தும் போது, இப்படி கடன் வரம்பை உயர்த்தி அளிக்க நிறுவனங்கள் முன் வருகின்றன.
எனினும், பயனாளிகளில் பலர், கடன் வரம்பு உயர்வை ஏற்க தயங்குகின்றனர். இதன் காரணமாக கடன் வலையில் சிக்கிக் கொள்ள நேருமோ என, அஞ்சுகின்றனர். ஆனால், கிரெடிட் கார்டு கடன் வரம்பு அதிகமாக இருப்பது பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது. கடன் வரம்பு அதிகம் இருப்பதால், கிரெடிட் ஸ்கோர் உயரும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, கடன் தவணை செலுத்துவது, கிரெடிட் கார்டு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. கடன் வரம்பைவிட குறைவான தொகையை பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் அதிகமாக அமைய வாய்ப்புள்ளது.
ஆனால், கடன் வரம்பு முழுவதையும் பயன்படுத்து பவர்களுக்கு, இதனால் கிரெடிட் ஸ்கோர் குறையும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் அதிகம் கடன் வாங்கும் இயல்பு கொண்டவர்களாக கருதப்படுவர். மாறாக, கடன் வரம்பு அதிகமாக இருக்கும் போது, கடன் பயன்பாடு, அதற்கு உட்பட்டே இருக்கும். இதனால், கிரெடிட் ஸ்கோர் நோக்கில் நல்ல பயன் உண்டாகும்.
அதேபோல கடன் வரம்பு அதிகம் இருக்கும் போது, அதற்கு ஏற்ப அதிக அளவிலான உடனடி கடனைப் பெறலாம். இந்தக் கடனை தனி நபர் கடன் போல பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு நிறுவனங்கள், பெரிய அளவிலான பொருட்களை வாங்க கார்டுடன் இணைந்த கடன் வசதியையும் அளிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|