பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
23:45
புதுடில்லி : ‘‘சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக, சரக்கு போக்குவரத்து செலவை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
தேசிய வடிவமைப்பு மையம், இந்திய சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக சின்னத்தை உருவாக்கியுள்ளது. டில்லியில், இச்சின்னத் தின் அறிமுக விழாவில், அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: சரக்கு போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரிவினரையும் உள்ள டக்கிய, வலைதளத்தை உருவாக்கும் பணியில், அமைச்சகம் ஈடுபட்டு உள்ளது. அத்துடன், உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில், சரக்கு போக்குவரத்து செலவினத்தை குறைக்க, சர்வதேச வல்லுனர்களின் துணையுடன், ஒருங்கி ணைந்த திட்டமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்த, பல கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இத்துறையின் மேம்பாட் டிற்காக, சிறப்பு செயலர் பினய் குமார் தலைமையில், புதிதாக, சரக்கு போக்குவரத்து பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்பிரிவு, சரக்கு போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்காக, வெளி நாட்டு வர்த்தகத்திற்கான இந்திய மையத்துடன், சமீபத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மிக அதிகம் :
நாட்டின் சரக்கு போக்குவரத்து துறை, 21,500 கோடி டாலர் மதிப்புடன், ஆண்டுக்கு, 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சரக்கு போக்குவரத்து செலவினம், 14 சதவீதமாக உள்ளது. இது, இதர நாடுகளை ஒப்பிடும்போது அதிகம். இதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
–சுரேஷ் பிரபு,மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|