பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:27
சென்னை : ‘‘சென்னை மற்றும் மும்பையில், தகவல் தொகுப்பு மையங்களை, ஆக., 15ல், ‘ஸோகோ’ நிறுவனம் துவங்குகிறது,’’ என, இதன் தலைமை செயல் அதிகாரி, ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: வணிக நிறுவனங்களுக்கான, ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ மென்பொருளை, ஸோகோ தயாரித்து வழங்குகிறது. 2017ம் ஆண்டு, ‘ஸோகோ – 1’ எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 16க்கும் மேற்பட்ட, ‘செயலி’கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த மென்பொருளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே இருந்த, செயலி கள் தொகுப்பை விட, அதிக செயலிகள் உள்ளடக்கிய, புதிய தொகுப்பை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளோம். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில், தலா இரண்டு தகவல் தொகுப்பு மையங்கள் உள்ளன. தற்போது, இந்தியாவில், சென்னை மற்றும் மும்பையில் இரண்டு தகவல் தொகுப்பு மையங்களை, ஆக., 15ல் துவங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|