பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:32
புதுடில்லி : டில்லியைச் சேர்ந்த, கிறிஸ்டல் கிராப் புரொட்டெக் ஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, விரைவில், பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, தெரிகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இத்தொகை, நடைமுறை மூலதன தேவைக்காக, ஏற்கனவே பெற்ற கடனை திரும்பத் தரவும், நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பங்கு வெளியீட்டை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல், எச்.எஸ்.பி.சி., செக்யூரிட்டீஸ், கேப்பிடல் மார்க்கெட்ஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைசரி உள்ளிட்ட நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. கிறிஸ்டல் கிராப் புரொட்டெக் ஷன் நிறுவனம், 1974ல், நந்து கிஷோர் அகர்வால் என்பவரால் துவக்கப்பட்டது. வேளாண் துறைக்கான ரசாயனப் பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டு, இதுவரை, 37 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|